திருப்பாடல்: 8
மார்கழி:8
சொல்சுருக்கமும் கவிநயமும் பலாப்பழச்சுளையுடன் தோல் ஒட்டியது போன்ற நெருக்கமுடன் காணக்கிடைக்கும் எட்டாம் பாடல். எவ்வளவு அவசரம் பாருங்கள். ஒருவரை எழுப்ப வேண்டும். எழுப்பட வேண்டியவரோ பெரிய செல்வாக்குள்ளவர். “வானம் வெளுத்திருச்சிங்க எழுந்திரிங்க” என்று நீள நீள வார்த்தைகளின் கும்மி ஆட்டம் இல்லை. முதலில் கீழ் வானம் பார்க்கிறார்கள். உடனே கீழ் வானம் “வெள்” என்று என்கின்றனர். (வெள்ளை என்று எழுதவில்லை) பட்டென திரும்புகிறார்கள். எருமை நிற்கிறது. எருமை என்ற சொல் மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். வீட்டைப் பார்த்தால் சிறிது. சிறு வீடு என்று குறிக்கிறார்கள். இப்படியே சொல்லி மேய்கிற ஆவினங்களை “மேய்வான்” என்றனர். நிறைய பசுக்கூட்டம் தெரிகிறது. “பரந்தன காண்” என்று வர்ணிக்கும்போதே திபுதிபுவென பிள்ளைகள் வந்துவிட்டார்கள். “மிக்குள்ள பிள்ளைகள்” என்று ஒற்றை வரியில் சொல்லி பட்டுபட்டாய் காட்சி அடுக்கும்போது மைக்கா தகட்டில் மயிலிறகு நழுவுவது போல் ஹைகூவுக்கும் தாண்டி விடுகிறார் ஆண்டாள் நாச்சியார்.
திருப்பாடல்:
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோது குலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய்! பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
மார்கழி:8
சொல்சுருக்கமும் கவிநயமும் பலாப்பழச்சுளையுடன் தோல் ஒட்டியது போன்ற நெருக்கமுடன் காணக்கிடைக்கும் எட்டாம் பாடல். எவ்வளவு அவசரம் பாருங்கள். ஒருவரை எழுப்ப வேண்டும். எழுப்பட வேண்டியவரோ பெரிய செல்வாக்குள்ளவர். “வானம் வெளுத்திருச்சிங்க எழுந்திரிங்க” என்று நீள நீள வார்த்தைகளின் கும்மி ஆட்டம் இல்லை. முதலில் கீழ் வானம் பார்க்கிறார்கள். உடனே கீழ் வானம் “வெள்” என்று என்கின்றனர். (வெள்ளை என்று எழுதவில்லை) பட்டென திரும்புகிறார்கள். எருமை நிற்கிறது. எருமை என்ற சொல் மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். வீட்டைப் பார்த்தால் சிறிது. சிறு வீடு என்று குறிக்கிறார்கள். இப்படியே சொல்லி மேய்கிற ஆவினங்களை “மேய்வான்” என்றனர். நிறைய பசுக்கூட்டம் தெரிகிறது. “பரந்தன காண்” என்று வர்ணிக்கும்போதே திபுதிபுவென பிள்ளைகள் வந்துவிட்டார்கள். “மிக்குள்ள பிள்ளைகள்” என்று ஒற்றை வரியில் சொல்லி பட்டுபட்டாய் காட்சி அடுக்கும்போது மைக்கா தகட்டில் மயிலிறகு நழுவுவது போல் ஹைகூவுக்கும் தாண்டி விடுகிறார் ஆண்டாள் நாச்சியார்.
திருப்பாடல்:
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோது குலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய்! பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
No comments:
Post a Comment