திருப்பாடல்:9
மார்கழி:9
மாடம் என்பார்கள். விளக்கேற்றும் இடத்தைப் பிறை என்பார்கள். அதில் ஒரு விளக்கு. இது தவிர சுற்றிலும் விளக்குகள் அழகாக ஒளிவிடுகின்றன. உள்ளே கதவு தாழிடப்பட்ட நிலையில், நல்ல - கமகம வாசம் நடுவே தூங்குகிறாள் ஒரு பெண். அந்தப்பெண் வேறு யாருமல்ல. நமது மனம் தான். ஐந்து புலன்களையும் தாண்டி வராமல் அதிலேயே மயங்கி உறங்குகிறது. சுற்றிலும் ஒளி. மனமோ உறக்க இருளில்! எப்படியிருக்கிறோம் பாருங்கள்!
ஹால்மென்ஹாண்ட் என்ற பிரபல ஓவியர் “உலகின் ஒளி” என்கிற அழகிய ஓவியம் வரைகிறார். அதன் காட்சி இதுதான். மிகப் பெரிய தோட்டத்தின் நடுவிலுள்ள வீட்டின் கதவை ஹரிக்கேன் விளக்குடன் தட்டுகிறார் ஏசு பெருமான். குறையே கூறும் ஒரு விமர்சகன் ஒருவன் “உமது ஓவியத்தில் உள்ள கதவினில் கைப்பிடியே இல்லையே...! ஏசு எப்படி திறப்பார்?” என்றானாம். “தம்பீ! அது மனிதனின் இதயக் கதவு ஆன்மீகக் கதவு. உள்ளிருப்பவர் காதில் விழுமாறு வெளியில் இருப்பவர் குரல் மட்டுமே கொடுக்க முடியும்- திறந்துகொள்வதும் இறைவனை உள்ளே அனுமதிப்பதும் அவரவர் செய்யவேண்டிய முயற்சி” என்று பதில் சொன்னாராம். நாம் ஏதோ மந்திரத்துக்கு அடிமை போல் புலன் இன்பத்தில் உள்ளோம் என்கிறார் ஆண்டாள் நாச்சியார்.
ஆண்டாள் நாச்சியாரின் பாடல் இதோ:-
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங்கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பொருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
மார்கழி:9
மாடம் என்பார்கள். விளக்கேற்றும் இடத்தைப் பிறை என்பார்கள். அதில் ஒரு விளக்கு. இது தவிர சுற்றிலும் விளக்குகள் அழகாக ஒளிவிடுகின்றன. உள்ளே கதவு தாழிடப்பட்ட நிலையில், நல்ல - கமகம வாசம் நடுவே தூங்குகிறாள் ஒரு பெண். அந்தப்பெண் வேறு யாருமல்ல. நமது மனம் தான். ஐந்து புலன்களையும் தாண்டி வராமல் அதிலேயே மயங்கி உறங்குகிறது. சுற்றிலும் ஒளி. மனமோ உறக்க இருளில்! எப்படியிருக்கிறோம் பாருங்கள்!
ஹால்மென்ஹாண்ட் என்ற பிரபல ஓவியர் “உலகின் ஒளி” என்கிற அழகிய ஓவியம் வரைகிறார். அதன் காட்சி இதுதான். மிகப் பெரிய தோட்டத்தின் நடுவிலுள்ள வீட்டின் கதவை ஹரிக்கேன் விளக்குடன் தட்டுகிறார் ஏசு பெருமான். குறையே கூறும் ஒரு விமர்சகன் ஒருவன் “உமது ஓவியத்தில் உள்ள கதவினில் கைப்பிடியே இல்லையே...! ஏசு எப்படி திறப்பார்?” என்றானாம். “தம்பீ! அது மனிதனின் இதயக் கதவு ஆன்மீகக் கதவு. உள்ளிருப்பவர் காதில் விழுமாறு வெளியில் இருப்பவர் குரல் மட்டுமே கொடுக்க முடியும்- திறந்துகொள்வதும் இறைவனை உள்ளே அனுமதிப்பதும் அவரவர் செய்யவேண்டிய முயற்சி” என்று பதில் சொன்னாராம். நாம் ஏதோ மந்திரத்துக்கு அடிமை போல் புலன் இன்பத்தில் உள்ளோம் என்கிறார் ஆண்டாள் நாச்சியார்.
ஆண்டாள் நாச்சியாரின் பாடல் இதோ:-
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபங்கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பொருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
No comments:
Post a Comment