மார்கழி:7
திருப்பாடல் :7
வலியன் குருவி என்று ஒரு குருவி. கருப்பு நிறமாய் இருக்கும். கருப்பு புளியங்கொட்டையால் எண்ணெய் தடவின மாதிரி மினுமினுக்கும். இருட்டைவிட இருட்டாக எடுத்து இறகுகள் செய்து அணிவிக்கப்பட்ட பறவை அது. ஆனால் காகத்தையே விரட்டும் தைரியம். தரையோடு தரையாக இறங்கி இடிப்பதுபோல் பறந்து சண்டை குணம் கொண்டது. ஆனால் பாருங்கள். இவ்வளவு குணாம்சம் இருந்தும் குரல் என்னவோ “கீசுகீசு” என கிசுகிசுப்பாக மட்டுமே கேட்கும். “மனம் என்கிற பேய்ப் பெண்ணே! உன்னைத் திறக்க நீயே அனுமதி கொடு. ஏனெனில் இதயக்கதவை வெளியிலிருந்து யாரால் திறக்க முடியும்? அவரவர்களே திறந்து மார்கழி ஞானக்காலையில் தம்மையே கடைந்து கொள்ளவேண்டும். உண்மையெனும் தயிராகிய உள் உள்ளத்திலிருந்து (அரவம்) ஓசை கேட்கட்டும்”
ஆனைச்சாத்தன் பறவையாக வந்தாலும் பெரும் குரலாக எழுப்பவில்லை ஆண்டாள் நாச்சியார். கீசுகீசு என்கிற அழகிய கவிநயம் வாசம் வீசுகிறது!
திருப்பாடல்:
கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
திருப்பாடல் :7
வலியன் குருவி என்று ஒரு குருவி. கருப்பு நிறமாய் இருக்கும். கருப்பு புளியங்கொட்டையால் எண்ணெய் தடவின மாதிரி மினுமினுக்கும். இருட்டைவிட இருட்டாக எடுத்து இறகுகள் செய்து அணிவிக்கப்பட்ட பறவை அது. ஆனால் காகத்தையே விரட்டும் தைரியம். தரையோடு தரையாக இறங்கி இடிப்பதுபோல் பறந்து சண்டை குணம் கொண்டது. ஆனால் பாருங்கள். இவ்வளவு குணாம்சம் இருந்தும் குரல் என்னவோ “கீசுகீசு” என கிசுகிசுப்பாக மட்டுமே கேட்கும். “மனம் என்கிற பேய்ப் பெண்ணே! உன்னைத் திறக்க நீயே அனுமதி கொடு. ஏனெனில் இதயக்கதவை வெளியிலிருந்து யாரால் திறக்க முடியும்? அவரவர்களே திறந்து மார்கழி ஞானக்காலையில் தம்மையே கடைந்து கொள்ளவேண்டும். உண்மையெனும் தயிராகிய உள் உள்ளத்திலிருந்து (அரவம்) ஓசை கேட்கட்டும்”
ஆனைச்சாத்தன் பறவையாக வந்தாலும் பெரும் குரலாக எழுப்பவில்லை ஆண்டாள் நாச்சியார். கீசுகீசு என்கிற அழகிய கவிநயம் வாசம் வீசுகிறது!
திருப்பாடல்:
கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
No comments:
Post a Comment