சைகைகள் தாண்டிபழிப்புகள் தாண்டி
தனது உயரம் அறிவிக்கிற பறவைக்கு ஒரு இடைஞ்சல்
நீர் நிலைகளில் விழுகின்ற தனது நிழலும்
தன்னைப் போலவே பறந்து பழிப்புகள் காட்டுவதாக!
பழிப்பு அறிந்த பறவைக்கு இன்னொன்றும் தெரியும்:
“நீர் நிலை தாண்டிய பின் -
பழிக்கும் நிழல் மாயமாய் மறைந்துவிடும்!”
(கல்கி 3.2.2013 இதழில் வெளிவந்த கவிதை)
தனது உயரம் அறிவிக்கிற பறவைக்கு ஒரு இடைஞ்சல்
நீர் நிலைகளில் விழுகின்ற தனது நிழலும்
தன்னைப் போலவே பறந்து பழிப்புகள் காட்டுவதாக!
பழிப்பு அறிந்த பறவைக்கு இன்னொன்றும் தெரியும்:
“நீர் நிலை தாண்டிய பின் -
பழிக்கும் நிழல் மாயமாய் மறைந்துவிடும்!”
(கல்கி 3.2.2013 இதழில் வெளிவந்த கவிதை)
No comments:
Post a Comment