மார்கழி :5
பாடல் :5
பாடல் :5
ஆச்சரியப்படும்படி செயல்புரிபவனை “ஆ..ஆ!” என வாய்பிளந்து வியப்போம். “மாயன்” என்று பெயர் சூட்டி அழைத்து அழகுபார்க்கிறார் நமது கோதை நாச்சியார். “21.12.2012ல் உலகம் அழியும்” என்கிற பயத்தைப் புகுத்தியது எங்கோ இருந்த மாயன் நாட்காட்டி. கண்ணபெருமானின் (மாயன்) நாட்காட்டி என்ன சொல்கிறது இந்த பயமுறுத்தல்களுக்கு? நாளைக்கே சூரியப்புயல் என்று கிலி காட்டினாலும் , “உலகீரே! நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்களுக்கு வாய் இருக்கிறது. வாருங்கள். உங்களுக்கு நான் தந்த மனம் இருக்கிறது. என்னைச் சிந்தியுங்கள். அப்போது எந்த ஒரு பிழையான செய்தியும் உங்கள் நெஞ்சில் புகாது. நெருப்பில் தூசு போல ஆக்குகிறேன்” என்று உறுதி கூறும் பாடல் இது.
பாடல்:
மாயனை மன்னும் வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் மணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்கப்
போய்ப்பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினால் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
No comments:
Post a Comment