மார்கழி :4
பாடல்:4
கண்ணபெருமானை வர்ணிப்பது சாதாரண வேலையல்ல. உயிரிலிருக்கும் தமிழையெல்லாம் கண்ணன் பருகக் கேட்பான். மகாகவி பாரதி தனது பாடல்களில் “தீராத விளையாட்டுப் பிள்ளை” என்று கொஞ்சும்போது அவனுக்குத் தகப்பன் ஆகி அவன் குறும்புகளை எழுதி மகிழ்வார். நமது கோதை நாச்சியார் பார்த்தாள். கடலும் இல்லாமல், கடல் சார்ந்த மழையும் இல்லாமல் உயிர்கள் வாழ சாத்தியமே இல்லை என்பதை அறிந்து - அந்தநீர் தான் - குடி நீர், மழை நீர் , ஆற்று நீர், ஏரி நீர், உயிர் நீர் என்று சரம் சரமாய் வர்ணித்து நேரம் கடத்தாமல் - ஒரே வரியில்- “ஆழி மழைக்கண்ணா!” என்று போட்டாளே ஒரு போடு. அதாவது ஆழியாகிய கடலும் கண்ணணே. மழை பொழிவும் கண்ணணே. அடுத்த தடவை , கடலைப் பார்த்தால் கண்ணன் காண்க. நெஞ்சு குழைக.
பாடல்:ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகுந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சாரங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
No comments:
Post a Comment