Thursday 27 December 2012

வா

புரியவில்லை -            
ஆளுக்கு ஒரு செல்போன் இருந்தும் அன்பால்
இணைப்பில்லாமல் போனது உலகம்
தான் எனும் நினைப்புடன்
சதா
செருமிக்களைக்கும் உலகம்
பக்கத்து மனிதரை அக்கறையில்லாமல் பார்க்கிறது
அடுத்தவர் வலியை அறிய மறுக்கிறது
சந்தைப் பரபரப்பில் கரும் பொட்டு வைத்துச் சிரிக்கும் மழலைகூட
ரசிக்கும் மனமில்லாமல் யந்திரமாக
விலை பேசும் தந்திரமாக மாறி வருகிறது
மேலோட்டமாய் இன்னும் எத்தனை நாள் உன் நிழலில்
நீயே தங்கிட உன்னையே நீ துரத்தி ஓடுவதை நிறுத்துவாய்?
என்று கேட்பதைக்கூட காது கேளவில்லையே என்கிறது உலகம்
உண்மையான அன்பான வெளிப்படையான உரையாடல்
துவங்கும் வரை
உனக்கே தெரியும்
நிலாவைப் பற்றி
அரசியல் அற்றி
ரஜினி உடல்நிலை பற்றி
முல்லை பெரியாறு பங்கீடு பற்றி
பொத்தாம் பொதுவில் பேசுவோம் வா.

(இலக்கியச் சிறகு புத்தகம் எண் :18 வெளிவந்த கவிதை)

1 comment:

  1. அன்பால் இணைப்பில்லாமல்- வரி அருமை...

    ReplyDelete