Sunday, 16 December 2012

வடலூர் வாழ் மகான் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் - 1





“அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி”
இதுவே வள்ளலார் இராமலிங்க அடிகள் கண்ட மகா மந்திரம் ஆகும். இதனை ஓதி ஆத்ம அமைதி கண்டோர் ஆயிரம் ஆயிரம்.
வள்ளல் பெருமான் முத்தேக சித்தி பெற்ற சித்தி வளாகம் ( அவர் தன்னை அறையில் சாத்திக்கொண்டு ஒளியாகிக் கலந்த இடமே சித்தி வளாகம்). அது சித்தி வளர் அகம் எனக் கொண்டாடி அதன் அருகிலேயே 1989முதல் அனாதைள் ஆதரவு அற்றோருக்கு உணவும் புகலிடமும் அளித்து வருகின்ற கோவை சிவப்பிரகாச சுவாமிகள்  குறித்து உங்களுடன் பகிர்கிறேன். வடலூரிலேயே வாழ்ந்தும் அவரைப்பற்றி எனக்கு சுத்தமாகத் தெரியாது.பிறகு எப்படி தெரிந்தது?”அலுவலக சக அன்பர் செங்குட்டுவன் எனும் திராவிடர் கழக அன்பர் சொன்னார்:-“அவசியம் போய் அவரைப்பாருங்க.. உங்களுக்கும் அவருக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டால் நான் ஒரு மணிநேரமா உங்கள்ட்ட பேசினது எல்லாம் தூசாத் தெரியும்”
              ( நான் போய் சந்தித்தேனா? என்ன கண்டேன் அங்கே?)

No comments:

Post a Comment