ஓம்சிவாயநம. அன்பு மனமே வணக்கம். பிளாக் ஆரம்பித்து உடனே பாரதிகுமாரும் அவர் மனைவி நிலாமகளும் கடிதம் அனுப்பி வாழ்த்துகிறார்கள்.இது ஒரு நல்லப் பழக்கம். நல்லவற்றை வாழ்த்தும்போது நல்லது நடக்கும். அவர்களுக்கு நன்றி. நிற்க.
14.12.12ல் நேற்றே எழுத வேண்டிய ஒன்று இப்போது எழுதுகிறேன். மனசு தாங்கவில்லை. பீடிகை
அதிகம்தான். காரணம் உண்டு. சாலையில் நான் பார்த்தது ஒரு நாய். இதுவரையில் அப்படி பார்த்ததேயில்லை. உடம்பில் உள்ள அத்தனை பாகமும் வெளியே பிதுங்கி
விட்டிருக்க - கண்களில் ஒன்று மட்டும் தெறித்து வழிய - சிறுகுடல் நீளமாய் ரத்தம் ஊற்றி ஸ்பீடு பிரேக்கரில் கோடு போட்டுக்கிடந்தது. அது என்ன சார். இப்படி ஒரு மரணம்.
திக்கித்துப்போனேன். இபோது என்ன செய்யலாம். ஆளாளுக்கு யாரோ கார்காரன் அடிச்சுட்டான் என்ற பேச்சுதான் சொல்கிறர்கள். எல்லா இடத்திலும் உதவி செய்வதற்காக பறக்கின்ற பாலிதீன் குப்பை பைகளில் இரண்டை மண்தட்டி எடுத்து உதறினேன். கைகளை நுழைத்துக்கொண்டு இறந்த நாயின் காலகளைப் ப்பிடித்துக்கொண்டு தூக்கி சாலை ஓரமுள்ள மண்பரப்பில் இழுத்துப்போட்டதும் காக்கைகள் வர ஆரம்பித்தன. காகத்தை விரட்டி ஒரு பிடி மண் போட்டு ஒரு நொடி பிரார்த்தனை செய்து வாட்ச் பார்க்க மணி எட்டு முப்பது என்றது. அடுத்தமுறை நீங்கள் இப்படி ஒரு நாயை கவனிக்க நேர்ந்தால் நிச்சயம் பாலிதீன் பயும் நேரமும் கிடைக்க சிவசக்தியை வேண்டிக்கொள்கிறேன்.
14.12.12ல் நேற்றே எழுத வேண்டிய ஒன்று இப்போது எழுதுகிறேன். மனசு தாங்கவில்லை. பீடிகை
அதிகம்தான். காரணம் உண்டு. சாலையில் நான் பார்த்தது ஒரு நாய். இதுவரையில் அப்படி பார்த்ததேயில்லை. உடம்பில் உள்ள அத்தனை பாகமும் வெளியே பிதுங்கி
விட்டிருக்க - கண்களில் ஒன்று மட்டும் தெறித்து வழிய - சிறுகுடல் நீளமாய் ரத்தம் ஊற்றி ஸ்பீடு பிரேக்கரில் கோடு போட்டுக்கிடந்தது. அது என்ன சார். இப்படி ஒரு மரணம்.
திக்கித்துப்போனேன். இபோது என்ன செய்யலாம். ஆளாளுக்கு யாரோ கார்காரன் அடிச்சுட்டான் என்ற பேச்சுதான் சொல்கிறர்கள். எல்லா இடத்திலும் உதவி செய்வதற்காக பறக்கின்ற பாலிதீன் குப்பை பைகளில் இரண்டை மண்தட்டி எடுத்து உதறினேன். கைகளை நுழைத்துக்கொண்டு இறந்த நாயின் காலகளைப் ப்பிடித்துக்கொண்டு தூக்கி சாலை ஓரமுள்ள மண்பரப்பில் இழுத்துப்போட்டதும் காக்கைகள் வர ஆரம்பித்தன. காகத்தை விரட்டி ஒரு பிடி மண் போட்டு ஒரு நொடி பிரார்த்தனை செய்து வாட்ச் பார்க்க மணி எட்டு முப்பது என்றது. அடுத்தமுறை நீங்கள் இப்படி ஒரு நாயை கவனிக்க நேர்ந்தால் நிச்சயம் பாலிதீன் பயும் நேரமும் கிடைக்க சிவசக்தியை வேண்டிக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment