Sunday 10 April 2022

 புரிகிறது..


தோட்டச் செடியைப்பார்த்தேன்.. என்ன செடியோ?

என்ன பெயரோ...?

சிந்தித்தாலும் தெரியவில்லை

பெயர் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்

பெருங்கூட்டத்தில் வயலின் வாசிக்கும் ஒருவனின் இசை போல

தனிப்பெயர் இல்லையென்றாலும் அது வாழ்கிறது

பூமிக்கு அனுப்பியாகிவிட்டது இருந்தாக வேண்டும் அது

நம் பயன் என்ன ?

நாம் ஆற்றும் செயலின் பயன் எங்கு போகிறது?

எதுவும் தெரியாது சொல்லப்படுவதில்லை நமக்கு

வாழ்ந்தாக வேண்டும் .. யாருக்காகவோ .. 

எதற்கோ..எங்கோ.. ஆனால் சந்தோஷமாக!

No comments:

Post a Comment