Friday 14 October 2016

பாடகி ஜானகியாரிடம் வேண்டல்




சில மாதம் முன்பு வந்த அறிவிப்பு என்றாலும்
ஏங்குகின்றேன் உள் மனத்தே சரஸ்வதி பூஜை தினத்தில்
கவிதைக் குரல் ஜானகி பெண்ணரசி
பாடுவதை விட்டு விலகி ஓய்வெடுக்கப் போவதாக
அறிவிப்பை எண்ணி கலங்குறும் உள் மனது
பக்திப் பாடல் நதிகளில் காவியம் படைத்த குரல்
சிறு குழந்தை குரலிலும் பாடிய ஜானகி
பின்னணிப் பாடகி அன்று முன் அணிப் பாடகி
வயது முதிர்வோ  தளர்வோ சலிப்போ
விருப்ப ஓய்வோ பாரத ரத்னா திருப்பி அளித்த
எண்ணக் குமுறலோ
எதுவாயினும் சரியம்மா
எமக்காக மீண்டும் பாடுக
எதுவாயினும் உமது குரலால் அஃது சங்கீதமாகும்.
எமக்கு அமுதம் வேண்டும் அம்மா.

No comments:

Post a Comment