Tuesday 19 July 2016

மாட்டேன் என்றால் மாட்டுவேன்




இனி கவிதை எழுத மாட்டேன் என
ஒரு கவிதை எழுதி விட்டேன்
இனி அனுப்ப மாட்டேன் என்றே
அனுப்பிக் கொண்டிருக்கிறேன்
படிக்க மாட்டேன் என்பவர்கள் படிப்பார்கள்
என்றோ எங்கோ எவர்க்கோ
இரு செவியில் விதையாகி ஒரு நொடியில்  கனியாகி
நினைவில் கலந்து மணம் வீசும்
இனி என் கவிதை.

No comments:

Post a Comment