அயர்ந்து கிடந்த
ஆயிரமாயிரம் முகங்களில்
உறைந்து கிடந்த உணர்வுவெளிகளில்
சட்டெனப் பரவ முடியாமல் தவித்தபோது
உள்ளங்காலில் பதிந்தும் இடம் தெரிந்தும்
நீண்ட வருடம் எடுக்கமுடியாத
நெருஞ்சி முள் போல உறுத்திற்று
ஷட்டவுன் செய்யும் கணநேரம் தோன்றி மறைய
கணிணி காட்டிய
இறந்த அப்பாவின் முகச்சிரிப்பு.
No comments:
Post a Comment