இசைமேதை மணக்கால் ரங்கராஜன் எனும் மாமேதை விழா!
12.2.2016ல் தக்க நேரத்தில் முதல் வரிசையில் அமர வைத்து
காணச் செய்த நண்பர்
ராதாகிருஷ்ணன் உள்ளம் வாழ்க இல்லம் வாழ்க ஓங்கி வளர்க
மணக்கால் ரங்கராஜன் எனும்
இசை சக்ரவர்த்திக்கு நமஸ்காரம்.
ஆலமரம் ஓயக்கூடும் காற்றின் மகிழ்ச்சி வீசும்
நாட்கள் நகர்ந்துவிடும்
நல்ல நினைவுகள் உள்ளே அமர்ந்துவிடும்
சாதித்தவர்கள் மறைவர்
சாதனைகள் கொண்டாடப்படும்
ஆம்! சாதாரண நிகழ்வா அது?
மணக்கால் என்ற சொல் கேட்டதுமே
ஆதி உணர்ச்சி அடி வயிற்றில்!
மணக்கால் சத்தியமோகன் இவனுக்குள்
மழைத்துளி தாய்மழைமேகம் ஒன்றுடன்
சேர்ந்த உணர்ச்சி!
“வாணி மகாலில்
தியாக பிரம்ம விபூஷண் விருது பெறும்
மணக்கால் ரங்கராஜன்” என்ற அறிவிப்பு
சங்கீத வாக்கர் அவர்
நகர்த்தி நகர்த்தி நகர்ந்து நகர்ந்து 93 வயசில்
வெண்சருகு இலை போல
மேடையில் அமரும் காட்சி
இசைச்சக்கரவர்த்தி நீடா மங்கலம்
B.M. சுந்தரம் ஐயா குறித்தார்:
“கவிகாளமேகம்
கொள்ளிடக்கரைக்கு ஈர மணல் காலுடன் வந்ததால்
“மணல்கால்” என்று வர்ணிப்பு மணக்கால் ஆனது”
இன்னும் சொன்னார்:
இந்திய முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமியும்
நீடா மங்கலம்தான்
அமரர் R.S.மனோகரும் நீடாமங்கலம்தான்!
“மணக்கால் ரங்கராஜன் ஐயா அவர்கள்
ஒரே நேரத்தில் இரு கைகளால் மிருதங்கத்தில்
இரு வித தாளம் வாசிப்பவர்” எனப்பகிர்ந்தார் கோபால்சுவாமி!
கலைவாணி ஸ்வரூபமாய் தோன்றினார் ரங்கராஜன்
சென்னை தொலைக்காட்சி வானொலி வாழ்த்தியது
இசைப்புனிதர்கள் நெகிழ்ந்தனர்
காஞ்சி மகாப் பெரியவா ஆசிகள் காற்றில்
அனைவர் மீதும் படர்ந்தது
கலைந்து நடந்தோம் அவரவர் வீட்டுக்கு.
“Better late than never” என்ற மன சமாதானம்
விருது தந்தவர்களுக்கு.
“புகழ் பலருக்கு இருக்கும் ஆனால் யோக்யதை இருக்காது
யோக்யதை பலருக்கு இருக்கும் ஆனால் தகுதி இருக்காது
மணக்காலோ இரண்டும் வாய்ந்தவர்”
இசைப் பிதாமகர் சுந்தரம் ஐயா புகழ் வார்த்தைகள்
சத்திய வார்த்தைகள்!
No comments:
Post a Comment