Monday, 30 November 2015



30.9.2015 வரை
மனநாட்டில் அப்பா இருந்தாரே அவ்வளவு பேசினாரே
உடல் போனால் எல்லாம் போகுமா
எங்கே எங்கே என உருகிய கணம்
உருவான சிறு கண்ணீர்த்துளி
நவம்பர் மழைநீர்ச்சாரலில் கரைந்தது
சாலை போக்குவரத்தில்
விக்கி விக்கி அழ முடியாமல்
ஐம்பத்தியிரண்டு வயது பொறுப்பு தடுத்தது
அப்பா எனும் அலைவரிசை
அப்பா எனும் அன்பு வரிசை
முரண்பாடு எனும் சிடுக்கில் புறத்தே சிக்கினாலும்
தனிச்சிவப்பு ரோஜாவெனச் அகத்தே சிரிக்குது
அப்பா இறந்து இன்றோடு இரண்டு மாதம் ஆகின்றது
அப்பாவை இழந்தவர்களுக்கெல்லாம்
அப்பா வருவார் அகத்தே அன்பாக இன்னும் வருவார்
ஆதலினால்
முழு அழுகையிலும் ஒரு  சிதறல் நுழைகின்றது.


 

No comments:

Post a Comment