Saturday 1 August 2015

அழகிய கலாமும் அழகிய காலமும்


              
கடவுளுக்கு நினைத்து நினைத்து நன்றி கூறி
இதயம் பூத்த இராமேஸ்வர ஜோதி மலரே ஏன் முடிந்து போனாய்!
அலட்சிய  மனங்கள் நடுவே
இலட்சிய பூமி மீது நெய்த செயல் நிலமே எங்கே விரைந்தாய்?
இலட்சியப் பொறி பற்றிய ஞான வீணையே
மேகாலயத்தில் இணைந்த தமிழ்மேக லயமே
நிம்மதி தேடி ஒடுங்கும் மூப்புப் பருவம் நடுவே
ஓடி ஓடி உழைத்த முதிய இளைஞரே
அழிவைத் தரும் அணுச் சோதனை பயம் போக்கி
துணிச்சலில் நிமிர்ந்த விஞ்ஞானமே
இஸ்ரோ விண்கலச் சரிவுக்குமட்டுமல்ல எதற்குமே
மனம் முறியாமல் அடுத்த சோதனைக்கு வித்திட்டாய் வித்தகமே
திருச்சி புனித ஜோசப் கல்லூரிப் புறாவே
இதய வால்வு ஸ்டண்ட் மெலிய எடை தந்த சுவாசமே
சிந்திப்பவர் ஞானமெல்லாம்
திருக்குறளாக இருக்கும் என்று வாழ்ந்த அன்பு கலாமே
ஆக்கபூர்வ எண்ணங்களில்
மரம் நடு விழா துவங்கிய நல் மனிதமே
நடு வகிடு எடுத்த நரை முடிச் சிரிப்பில்
குழந்தைகள் இளைஞர்கள் சிந்திக்கவைத்த நேசமே
முடிவில்தான் ஆரம்பம் இருக்கும் என்பதால்
முதியவர்கள் ஞானமெல்லாம்
மாணவப் பருவம் நோக்கித் திருப்பிய உணர்வே
பகவத் கீதையின் கர்மயோகம் பயின்ற இஸ்லாமே
கல்விப் பேச்சுரை ஆற்றும்போதே சரிந்த
தமிழ் மூச்சுரையே
திருமணமே புரியாமல்
இந்தியாவைத் திருமணம் செய்த மணமே
வீசும் உன் புகழ் இனிமேல்தான் இன்னும் இன்னும்!
 

3 comments:

  1. திருமணமே புரியாமல்
    இந்தியாவைத் திருமணம் செய்த மணமே -அருமையான கவிதை.நண்பரே

    ReplyDelete
  2. அற்புதமான கவிதை நண்பரே

    ReplyDelete
  3. அற்புதமான கவிதை நண்பரே

    ReplyDelete