Saturday, 1 August 2015

எ(மது) எம்.எஸ்.வி



எம் என்பது எமது ! எமது எஸ். விஸ்வநாதரே!
அதிசயம் தான்!
அன்று உம்மைச் சந்தித்தேன்
மகிழ்ச்சியின் வெள்ளைவேட்டி நடை கொண்டு
ஓர் திருமண வரவேற்பில் ஏவிஎம் மண்டபத்தில்
பணிவின் பனிக்குடமாக! எத்தனை மூளை சுறுசுறுப்பு!
சட்டென சொல்லாமல்
காலில் விழுந்தேன் இசை நாயகா!
கவிஞன் எனக்கு அதில் அகமகிழ்வு!
எத்தனை இசைக்கருவிகள் தொட்டகரங்கள்!
அத்தனையும் ஆர்மோனிய விரலாச்சு உனக்கு
உன் விபூதி குங்குமசந்தன நெற்றிக்கண்  உற்சாகக் குரல்
இன்றும் காதில்  கேட்கிறது எனக்கு!
சுசீலா டி.எம்.எஸ் பாலசுப்ரமணியம் குரல்களில்
கவியரசு கண்ணதாசன் சாறு கலந்து
இசைத் தேன் கலந்து பெருக
காலத்தேர் ஓட்டிய இசைத் தேவனே
நீ தற்கொலை புரிய முயன்றாய் மூன்று முறை
1.உன் தாய் இறந்தபோது
2.கண்ணதாசன் இறந்தபோது
3.எம்.ஜி.ஆர் இறந்தபோது
இப்போது இசைப்பாடல்கள் என்ன ஆகும் நீயே பாடு
மன அழுத்தம் தவிர்க்க தமிழனுக்கு ஒரு வழி 
எம்.எஸ்.வி பாடல்களின் ஜீவன் !
மனிதர்கள்  அன்புபேச என்றும் உன் இசை வாழுமய்யா இசை விஸ்வ நாதரே.
 

No comments:

Post a Comment