Thursday, 9 July 2015

சார்பு

  
அன்றும் இன்றும்
பறவைதான் அநியாயத்தை முதலில் அறிகிறது
சீதை கடத்தும் இராவணன் மார்புக் கவசம் அறுத்தது ஜடாயு
காது குண்டலங்களை அறுத்தது ஜடாயு
இராவணன்  வில்லினைப் பறித்து வானில் எறிந்தது ஜடாயு
இராவணன் தேர் நகரவிடாமல் சிறகு பரப்பிற்று ஜடாயு
இராம இலக்குவனுக்கு செய்தி செப்பும் வரை உயிர் விடவில்லை
இன்றும் சிட்டுக்குருவிகள்
ஜடாயு சார்பாக
இயற்கை எனும் சீதை காக்க
பாலிதீன் பையை கொத்தி எறிகிறது
வானிலோ மின் கம்பித்தடத்திலோ அலைந்து
அது வாடுகின்றதோ இல்லை எச்சரிக்கின்றதோ !

(இலக்கியச் சிறகு இதழில் வெளிவந்த கவிதை)
*****
 

No comments:

Post a Comment