அனைவருக்கும் அன்பு இணைய தள நட்பு மனங்களுக்கும் அனைத்து நலங்களும் முருகப்பெருமான் அருள பிரார்த்னை செய்து கொண்டு
அன்பு வாழ்த்துகள் பகிர்கிறேன்.
மேலும் பாண்டிச்சேரி வானொலியில் (MW1215 khz) 14.4.21015 காலை 9 மணிக்கு ஒலிபரப்பாகும் என் கவிதையும் இதோ உங்கள் சிந்தைக்கு:-
அன்னைத் தமிழ்ப்புத்தாண்டு
மெல்ல உதயமாகிக் கொண்டிருந்தது
“மன்மத ஆண்டு !” என்று நாட்காட்டி சொன்னது
அன்று
ஒரு நகரின் வெட்டவெளியில்
இருவருக்கான மேடை போட்டிருந்தது
பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்
நீண்ட வருடங்களாக
முகமூடிதரித்த ஒருவர் !
இரயில் பயணங்களிலும் பொது இடங்களிலும்
365 நாட்களும்
எதிர்பாராமல் அவ்வப்போது
அடிவாங்கிய காயமுடன் ஒருவர்!
அடி கொடுப்பவருக்கு பதுங்கி வாழ்கிறவருக்கு - மூடிய முகம்
அன்றாடம் அடி வாங்கினாலும் - இவருக்கு கனிவு முகம்
தின்று கொழித்து செழித்திருந்தார் அவர்
ஒல்லியாய் ஆனால் ஆன்மீக தெளிவுடன் இவர்
அவர்கள் இருவரும் யார் என்று .
கூர்மையுடன் கவனித்தார்கள் மக்கள்
பேட்டி உரையாடல் ஆரம்பமானது
“என்னை அறிக!
என் பெயர் “தீவிரவாதம்” என்றான் ஒருவன்
அன்பிலே கருத்தரித்த அடியவன் பெயர்
“மனித நேயம்” என்றான் இவன்
பொதுமக்கள் சலசலத்தார்கள்
என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயந்தார்கள்
“என் பெயரில் மொத்தம் ஆறெழுத்து! தெரியுமா!”
என்றான் அவன் வலிமையாக!
ஆறுதலைத் தரும் மலையில் பிறந்து
வேலில் உண்டானேன் ! எனக்கும் ஆறெழுத்துதான்!”
என்றான் இவன் - உண்மையாக.
“எதற்காக என் கைகளைக்கட்டிபோட கயிறு தேடுகிறாய்?
ஏழை வயிறு போல் ஒட்டிபோன பசியால்
நீ என்னடா செய்வாய்?”என்று விரட்டியது அது
“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே!” என்று
வள்ளலார் அருட்பா பாடியது இது!
“நான் இருளின் பிள்ளை” என்றது தீவிரவாதம்
“நான் ஒளியின் கொழுந்து அன்பின் மருந்து” என்று
புன்னகைத்தது மனிதநேயம்
“என்னைப்போல் உன்னால் ஒரே நாளில்
எல்லா டி.வி.சேனலிலும்
பெயர் வாங்க முடியுமா” என்றது தீவிரவாதம்
“என்னைப்போல் தியாகம் செய்து அன்பின் பெயர் சூட்டு
அன்று உனக்குப் புரியும்” என்றது அன்புவாதம்
“நீயும் நானும்
எந்த விதத்திலும் சமரசம் ஆக முடியாது” என்றது அது
‘அன்பிற்கு தாழ்ப்பாள் போட்டு அடைக்க முடியாது
விழும் கண்ணீர் உன் மீது என் காதலாகும்! ” என்று விவரித்தது இது
“நீ பாய்ந்து தாக்க வந்தால்
உன் கால்கள் வெட்டுவேன்!” என்றது தீவிரவாதம்
“முள்ளாகி
காற்றைக் கீறுவதாய் நீ நினைக்கிறாய்
காற்றாகி
நான் உன்னைத் தழுவுவதாய் நான் நினைக்கிறேன்”
என்றது மனித நேயம்.
“யானையாகிய எனக்கு மதம் பிடித்தால்
நொறுக்குவேன் உன்னை!” என்றது அது!
“யானைக்குத்தான் மதம் பிடிக்கும்
மனிதநேயத்திற்கு மதம் பிடிக்காது” என்றது இது.
“சந்திர நிலவொளியும்
பட்டப்பகல் சூரியனும் எப்படி சந்திக்கும்?
உன் குணங்கள் எனக்கு எப்படிப் பிடிக்கும்?” - அது சொன்னது!
“அறம் வளர்க்கும் காவிரியில்
நீராய் மாறி ஓடி வா
பயிர்கள் செழிப்பாக
உன் அன்பில் பூக்கள் போல் நான் மிதப்பேன்” என்றது இது!
“சுட்டெரிக்கும் துன்பம் தீர்க்க ஆயுதமே வழி” என்றது அது
“அஹிம்சை என்பது
மலர்களில் செய்த மனசாட்சி” என்றது இது
“அடித்துப் பேசினால்தான் சரிப்படுவாய் நீ !” என்றது கோப முகம்
“என் எலும்பைக்கூட
நீயே எடுத்துக்கொள்”என்றது திருக்குறளாய் சொன்னதுஅன்பு முகம்
“உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று மிரட்டியது பலம்!
“இருப்பவனை விட
இல்லாதவனின் நியாயமே பலமுள்ளது” என்றது இது.
“என்னுடன் கைகுலுக்கு! என்னைப் போலாகி விடு!” என்றது அது
“சூரியனின் நிறம்
கருப்பாகும்போது கூட
அன்பின் நிறம் மாறாது” என்றது இது
“முடிவாக என்னதான் சொல்கிறாய்?
உன்னைப் போல் என்னால்
பாவம் செய்யாமல் இருக்கமுடியாது” என்றது அது.
“அதிகம் வேண்டாம்!
ஏழே ஏழு பாவங்கள் மட்டும் செய்யாது விட்டுவிடு
என்று கெஞ்சியது மனிதநேயம்.
“குழைவாகப் பேசி
என் கல் மனம் கரைக்காதே” என்றது அது.
“தண்ணீரைக் கூட சல்லடையில் ஏந்தலாம்
பனிக்கட்டியாக மாறும் வரை
பொறுமையாய்க் காத்திருந்தால்” என்றது இது
“நீ மிகவும் பேசுகிறாய்! கைகள் தூக்கு!
உன்னைத் தீர்த்துக் கட்டப் போகிறேன்! கவுண்ட் டவுன்!
கடைசி ஆசை என்னவெனச் சொல்” என்றது அது
“மீண்டும் சொல்கிறேன் நண்பா !
ஏழுபாவங்கள் விட்டுவிடு அது போதும் என்றது இது
“உச்சி வெயில்
பசி நேரம் வந்துவிட்டது சாப்பிட்டுவிட்டுச் சொல்” என்றது அது
“உழைக்காமல் வந்த செல்வம் ஒரு பாவம்
ஒழுக்கமில்லாத கல்வி ஒரு பாவம்
கொள்கையில்லாத அரசியல் ஒரு பாவம்
தியாகமில்லாத வழிபாடு ஒரு பாவம்
நாணயமில்லாத வியாபாரம் ஒரு பாவம்
மனிதாபிமானமில்லாத விஞ்ஞானம் ஒரு பாவம்
மனசாட்சியில்லாத இன்பம் ஒரு பாவம்”
ஆஹா இனிமை இனிமை - இதெல்லாம் சொன்னது யார்?
மகாத்மா காந்திஅடிகள் தானே!
மனித நேயத்தின் புத்தாண்டு செய்தி இது!
மன்னித்து விடு ! மனம் திருந்தினேன்! என்றது தீவிரவாதம்
“சினிமாவில் வருவதுபோல்
எப்படி அரை நிமிடத்திற்குள்
உன் மனம் மாறியது என எனக்குத்தெரியும் !
பசியால் துடித்த என்னை நோக்கி
முதலில் சாப்பிடு பிறகு பதில் சொல்”
என்றபோதே புரிந்துகொண்டேன்!! என்றது மனிதநேயம்
பொதுமக்கள்
கைத்தட்டிப் பாராட்டினார்கள்
தேவர்கள் பூ மாரிப் பொழிந்தார்கள்
அன்புப் பசியும் அங்கீகாரப் பசியும் தீர்ந்து
மகிழ்ந்தது தீவிரவாதம்!
வயிற்றுப்பசி தீர்ந்து
மகிழ்ந்தது மனிதநேயம்!
மன்மத ஆண்டு முதல்
இருவரும் ஒற்றுமையாய் ஆனார்கள்
இருவரும் ஒருவராகி
ஒரே பெயர் மனித நேயம் எனப்பெற்றார்கள்!
“மனிதநேயம் வளரட்டும் வாழ்க வாழ்க!”
என்று வாழ்த்தியது உலகம் முழுதும் மனித குலம்!!
******
அன்பு வாழ்த்துகள் பகிர்கிறேன்.
மேலும் பாண்டிச்சேரி வானொலியில் (MW1215 khz) 14.4.21015 காலை 9 மணிக்கு ஒலிபரப்பாகும் என் கவிதையும் இதோ உங்கள் சிந்தைக்கு:-
அன்னைத் தமிழ்ப்புத்தாண்டு
மெல்ல உதயமாகிக் கொண்டிருந்தது
“மன்மத ஆண்டு !” என்று நாட்காட்டி சொன்னது
அன்று
ஒரு நகரின் வெட்டவெளியில்
இருவருக்கான மேடை போட்டிருந்தது
பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்
நீண்ட வருடங்களாக
முகமூடிதரித்த ஒருவர் !
இரயில் பயணங்களிலும் பொது இடங்களிலும்
365 நாட்களும்
எதிர்பாராமல் அவ்வப்போது
அடிவாங்கிய காயமுடன் ஒருவர்!
அடி கொடுப்பவருக்கு பதுங்கி வாழ்கிறவருக்கு - மூடிய முகம்
அன்றாடம் அடி வாங்கினாலும் - இவருக்கு கனிவு முகம்
தின்று கொழித்து செழித்திருந்தார் அவர்
ஒல்லியாய் ஆனால் ஆன்மீக தெளிவுடன் இவர்
அவர்கள் இருவரும் யார் என்று .
கூர்மையுடன் கவனித்தார்கள் மக்கள்
பேட்டி உரையாடல் ஆரம்பமானது
“என்னை அறிக!
என் பெயர் “தீவிரவாதம்” என்றான் ஒருவன்
அன்பிலே கருத்தரித்த அடியவன் பெயர்
“மனித நேயம்” என்றான் இவன்
பொதுமக்கள் சலசலத்தார்கள்
என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயந்தார்கள்
“என் பெயரில் மொத்தம் ஆறெழுத்து! தெரியுமா!”
என்றான் அவன் வலிமையாக!
ஆறுதலைத் தரும் மலையில் பிறந்து
வேலில் உண்டானேன் ! எனக்கும் ஆறெழுத்துதான்!”
என்றான் இவன் - உண்மையாக.
“எதற்காக என் கைகளைக்கட்டிபோட கயிறு தேடுகிறாய்?
ஏழை வயிறு போல் ஒட்டிபோன பசியால்
நீ என்னடா செய்வாய்?”என்று விரட்டியது அது
“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே!” என்று
வள்ளலார் அருட்பா பாடியது இது!
“நான் இருளின் பிள்ளை” என்றது தீவிரவாதம்
“நான் ஒளியின் கொழுந்து அன்பின் மருந்து” என்று
புன்னகைத்தது மனிதநேயம்
“என்னைப்போல் உன்னால் ஒரே நாளில்
எல்லா டி.வி.சேனலிலும்
பெயர் வாங்க முடியுமா” என்றது தீவிரவாதம்
“என்னைப்போல் தியாகம் செய்து அன்பின் பெயர் சூட்டு
அன்று உனக்குப் புரியும்” என்றது அன்புவாதம்
“நீயும் நானும்
எந்த விதத்திலும் சமரசம் ஆக முடியாது” என்றது அது
‘அன்பிற்கு தாழ்ப்பாள் போட்டு அடைக்க முடியாது
விழும் கண்ணீர் உன் மீது என் காதலாகும்! ” என்று விவரித்தது இது
“நீ பாய்ந்து தாக்க வந்தால்
உன் கால்கள் வெட்டுவேன்!” என்றது தீவிரவாதம்
“முள்ளாகி
காற்றைக் கீறுவதாய் நீ நினைக்கிறாய்
காற்றாகி
நான் உன்னைத் தழுவுவதாய் நான் நினைக்கிறேன்”
என்றது மனித நேயம்.
“யானையாகிய எனக்கு மதம் பிடித்தால்
நொறுக்குவேன் உன்னை!” என்றது அது!
“யானைக்குத்தான் மதம் பிடிக்கும்
மனிதநேயத்திற்கு மதம் பிடிக்காது” என்றது இது.
“சந்திர நிலவொளியும்
பட்டப்பகல் சூரியனும் எப்படி சந்திக்கும்?
உன் குணங்கள் எனக்கு எப்படிப் பிடிக்கும்?” - அது சொன்னது!
“அறம் வளர்க்கும் காவிரியில்
நீராய் மாறி ஓடி வா
பயிர்கள் செழிப்பாக
உன் அன்பில் பூக்கள் போல் நான் மிதப்பேன்” என்றது இது!
“சுட்டெரிக்கும் துன்பம் தீர்க்க ஆயுதமே வழி” என்றது அது
“அஹிம்சை என்பது
மலர்களில் செய்த மனசாட்சி” என்றது இது
“அடித்துப் பேசினால்தான் சரிப்படுவாய் நீ !” என்றது கோப முகம்
“என் எலும்பைக்கூட
நீயே எடுத்துக்கொள்”என்றது திருக்குறளாய் சொன்னதுஅன்பு முகம்
“உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று மிரட்டியது பலம்!
“இருப்பவனை விட
இல்லாதவனின் நியாயமே பலமுள்ளது” என்றது இது.
“என்னுடன் கைகுலுக்கு! என்னைப் போலாகி விடு!” என்றது அது
“சூரியனின் நிறம்
கருப்பாகும்போது கூட
அன்பின் நிறம் மாறாது” என்றது இது
“முடிவாக என்னதான் சொல்கிறாய்?
உன்னைப் போல் என்னால்
பாவம் செய்யாமல் இருக்கமுடியாது” என்றது அது.
“அதிகம் வேண்டாம்!
ஏழே ஏழு பாவங்கள் மட்டும் செய்யாது விட்டுவிடு
என்று கெஞ்சியது மனிதநேயம்.
“குழைவாகப் பேசி
என் கல் மனம் கரைக்காதே” என்றது அது.
“தண்ணீரைக் கூட சல்லடையில் ஏந்தலாம்
பனிக்கட்டியாக மாறும் வரை
பொறுமையாய்க் காத்திருந்தால்” என்றது இது
“நீ மிகவும் பேசுகிறாய்! கைகள் தூக்கு!
உன்னைத் தீர்த்துக் கட்டப் போகிறேன்! கவுண்ட் டவுன்!
கடைசி ஆசை என்னவெனச் சொல்” என்றது அது
“மீண்டும் சொல்கிறேன் நண்பா !
ஏழுபாவங்கள் விட்டுவிடு அது போதும் என்றது இது
“உச்சி வெயில்
பசி நேரம் வந்துவிட்டது சாப்பிட்டுவிட்டுச் சொல்” என்றது அது
“உழைக்காமல் வந்த செல்வம் ஒரு பாவம்
ஒழுக்கமில்லாத கல்வி ஒரு பாவம்
கொள்கையில்லாத அரசியல் ஒரு பாவம்
தியாகமில்லாத வழிபாடு ஒரு பாவம்
நாணயமில்லாத வியாபாரம் ஒரு பாவம்
மனிதாபிமானமில்லாத விஞ்ஞானம் ஒரு பாவம்
மனசாட்சியில்லாத இன்பம் ஒரு பாவம்”
ஆஹா இனிமை இனிமை - இதெல்லாம் சொன்னது யார்?
மகாத்மா காந்திஅடிகள் தானே!
மனித நேயத்தின் புத்தாண்டு செய்தி இது!
மன்னித்து விடு ! மனம் திருந்தினேன்! என்றது தீவிரவாதம்
“சினிமாவில் வருவதுபோல்
எப்படி அரை நிமிடத்திற்குள்
உன் மனம் மாறியது என எனக்குத்தெரியும் !
பசியால் துடித்த என்னை நோக்கி
முதலில் சாப்பிடு பிறகு பதில் சொல்”
என்றபோதே புரிந்துகொண்டேன்!! என்றது மனிதநேயம்
பொதுமக்கள்
கைத்தட்டிப் பாராட்டினார்கள்
தேவர்கள் பூ மாரிப் பொழிந்தார்கள்
அன்புப் பசியும் அங்கீகாரப் பசியும் தீர்ந்து
மகிழ்ந்தது தீவிரவாதம்!
வயிற்றுப்பசி தீர்ந்து
மகிழ்ந்தது மனிதநேயம்!
மன்மத ஆண்டு முதல்
இருவரும் ஒற்றுமையாய் ஆனார்கள்
இருவரும் ஒருவராகி
ஒரே பெயர் மனித நேயம் எனப்பெற்றார்கள்!
“மனிதநேயம் வளரட்டும் வாழ்க வாழ்க!”
என்று வாழ்த்தியது உலகம் முழுதும் மனித குலம்!!
******
No comments:
Post a Comment