Friday, 20 September 2013

மகாளய பட்சம்

இரு சக்கர வாகனத்தில் செல்கிறோம்
பின்னே வரும் வண்டிகளும் மனிதர்களும்
பக்கவாட்டுக் கண்ணாடியில் தெரிகின்றது
நகர்ந்து நகர்ந்து விலகி விலகி பயணப்பட்டோம்
அடுத்த நொடியில் காணோம் அவர்களை  
சென்று  சேருமிடத்தில் இறங்கியபோதும்
கண்ணாடியில் தென்பட்டவர்கள் நேரில் வருவதில்லை
காட்சி அளிப்பதில்லை
ஆனால் அவர்கள்
நம் பாதையில் ஒரு கணம் தெரிந்தது நிஜம் தானே
நம் பாதையை மாற்றியது நிஜம் தானே
நிகழும் செப்டம்பர் 20 முதல் பதினைந்து நாட்கள்
மகாளய பட்சமும் அப்படித்தான்
மாறி மாறி நகரும் நம் வாழ்வுப் பாதையில்
நம்மை உணர்த்தியும் திருத்தியும் வந்தவர்கள்
பூமிக்கு அரூபமாய் வந்து நம்மோடு தங்கும் தினங்கள்!
அறிந்து உணர்ந்து வாழ்வில் சக்தி பெறுவோம்.

No comments:

Post a Comment