பாடல்-226:
இராமனின் புகழ் -
செவிக்குத்தேன்! அதனைத்
திருந்தச் சொல்பவன் அனுமன்
திரும்பத் திரும்பச் சொல்பவன் அனுமன்
கோபத்தை அடக்கிக் கொண்டான்
“உறங்குகிற இவன் இராவணாக இருந்தாலும் இருக்கட்டும்
இன்னும் சில பகல்களே வாழப் போகிறான்!”
என அகன்றான் அனுமன்
பாடல்-227:
இராமனது அனைத்து புகழையும் தொகுத்தால்
அது அனுமனாகத்தான் இருக்கும்
அப்படிப்பட்ட அனுமன் தேடுகிறான் சீதையை
மாடங்களில்
கூடங்களில்
மாளிகைகளில்
மகளிர் ஆடல் அரங்குகளில்
அம்பலங்களில்
தேவர் ஆலயங்களில்
பாடல் மேடைகளில்
பட்டி மண்டபங்களில்!
பாடல்-228:
காற்று போல பரவித் தேடுகிறான் அனுமன்
நகர மாளிகை வாயில்களில்
சாளரத் தலங்களில்
மலர்களில்! அட!
மலர்களின் தண்டுக்குள்ளும் புகுந்து தேடுவான்
அந்தந்த இடத்துக்கு ஏற்ப
நுண்ணிய வடிவோ - பெருவடிவோ
அவன் அலைதல் கதியை - சிரமத்தை
யார் தான் சொல்ல முடியும்!
திருமால் -
மிகச்சிறிய அணுவிலும் உள்ளார்
மிகப்பெரிய மலையிலும் உள்ளார்
சீதை தேடும் அனுமனும் இப்போது
திருமால் போல்
அனைத்திலும் கலந்து தேடுகிறான்.
பாடல்-229:
ஏந்தல் அனுமன்
எல்லா இடங்களிலும் தேடினான்
காந்தள் மலர் என விரல்கள் கொண்ட
அனைத்து மங்கையரையும் பார்த்து வந்தான்
அலைந்தான் அலைந்தான்
கண்டான் ஒரு மாளிகை அது ஒரு மாளிகை
அரசர் , அசுரர், மேலுலகினர், கீழ் உலகினர்
யாவரும் விரும்பும் விபீஷணன் மாளிகை!
பாடல்-230:
ஆஹா ! கற்பக மரங்கள்!
அவற்றின் நிழலே ஆனந்தம்
அதிலும் அவை தேன் சொரியும் மரங்கள்
அதன் கீழே
விபீஷணன் மாளிகை இருக்கிறது
“அரக்கர்களின் கருமை நிறம் நடுவே
வெண்ணிறமாகிய நாம் வாழ்தல் கூடாது”
என எண்ணி விலகியதுபோல இருந்தது மாளிகை
தருமத்தைப் போன்ற
விபீஷணனை நெருங்கிக் கண்டான்.
பாடல்-231:
விபீஷணன் பண்பு நலன்களை
அவன் உணர்வுகளை
தன் உணர்வினால் உணர்ந்தான் அனுமன்
“குற்றமிலாத நற்குணத்தவன்” என உணர்ந்தான்
கோபம் நீக்கிய மனத்தினன் ஆகி
மலை போன்ற ஒரு கோடி மாடங்களில் புகுந்து
சீதையைத் தேடி முடித்தான்
பாடல்-232:
தேவமகளிர் பலரைக் கண்டான்
முழுமதி முகமும்
செந்நிறவாயும் உடைய பலரைக் கண்டான்
அவர்களில் சீதை இல்லை என அறிந்து
மாளிகைகள் கடந்தான்
தன் மன வேகமும் மீறும் அனுமன்
இப்போது -
இந்திரன் சிறையிருந்த
இந்திரஜித் மாளிகை வாசல் அடைந்தான்
பாடல்-233:
இந்திரன் வீட்டு வாசலில்
யார் யார் இருந்தார்கள்...
ஆயுதங்கள் ஏந்திய பெரும்கை உடையவர்கள்
கோரப்பற்கள் தெரிய சிரிப்பவர்கள்
மூதுரைகள் -பெரும் கதைகள்- விடுகதைகள் சொல்பவர்கள்
போர்க்களத்தில் கோபிப்பதில் மகிழ்ச்சி அடைபவர்கள் என
பல்லாயிரக்கணக்கானவர்கள் !
அவர்களைக் கடந்தான் அனுமன்.
பாடல்-234:
இந்திரஜித்
அழகிய மகளிர் மத்தியில் உறங்குகிறான்
“மூன்று கண் முக்கண்ணன் மகன்
ஆறுமுகன் -
ஆறுமுகங்களையும் பன்னிரு கைகளையும் மறைத்து
ஒரு முகமும் இருகரமுமாக தோன்றினானோ” என்று நினைத்து
அவன் அறையை நோக்கினான்
புகை நுழைய முடியாத இடத்திலும் புகுகிற அனுமன்.
பாடல்-235:
“குகை சிங்கம் போன்ற இந்திரஜித்
கோரைப்பற்கள் கொண்ட அரக்கர் மகனோ!
சிவனின் மகன் முருகனோ!
வேறு எவனோ!
அறிய முடியவ்¢ல்லையே
இராமனும் இலக்குவனும்
பல நாட்கள் இவனுடன் போர் நிகழ்த்த வேண்டியிருக்கும்”
பாடல்-236:
இந்திரஜித்தை தனது இனிய மகன் எனப்பெற்றதால்
இராவணன் மூவுலகமும் வென்றது அரிய செயலென
வர்ணிக்க முடியாது
அது எளிய செயல்களில் ஒன்று!
சிவன் - பிரம்மன் - திருமால்
இந்திரஜித்துக்கு ஒப்பானவர்கள்!
மற்றவர்களோடு ஒப்பிடுதல்
அறிவுடைமை அல்ல.
பாடல்-237:
அனுமன் -
இப்படியெல்லாம் நினைத்து
“அறிவுடைமை ஆகாது” என்பதை
சைகையிலும் காட்டினான்
“இங்கு இந்திரஜித்திடம் வீணே காலம் கழிப்பது நல்லதல்ல
என நினைத்து நகர்ந்தான்
ஆயிரம் ஆயிரம் மாளிகைகளிலும்
சந்தேகத்திற்கு இடமில்லாவிட்டாலும்
துருவ்¢த் துருவி தேடினான்.
பாடல்-238:
அனுமன் யார்?
இராமனின் திருவடி போல் புகழ் கொண்டவன்!
அட்சகுமாரனது வீடு தாண்டி
அதிகாயன் மாளிகையிலும்
போர் வீரர்கள் நடுவிலும்
ஆலோசனைக்குரிய அமைச்சர்கள் வீட்டிலும்
தாவிக்குதித்து
உட்புகுந்து தீவிரமாக தேடுகிறான்.
பாடல்-239:
மிகப்பெரிய படைத்தலைவன் இருப்பிடமான
ஆயிரம் கோடி பொன் மாளிகையில் தேடுகிறான்
அழியாத இலங்கையில் மறைவான இடம் இராவணனுடையது
அங்கும் தேடினான்
மூன்று அகழிகளில் நடுவில் உள்ள அகழி அடைந்தான்
தேவி கிட்டவில்லை!
பாடல்-240:
ஒப்பற்ற மதயானைக்கு துணையில்லை
அனுமனும் அப்படியே!
அனுமன் பாய்ந்த போது
அகழி கண்ணுக்கு தென்பட்டது
அனுமன் நினைத்தான்:-
“என்னால் எளிதில் பெருங்கடல்
தாண்டப்பட்டது
அந்த அவமானம் தாளாத கடலரசன்
என்னால் தாண்ட முடியாதபடி இப்போது
ஏழு கடல்களையும் ஒன்றாக அமைத்து விட்டான்”
பாடல்-241:
“இந்த அகழிக்கு -
சிறந்த அகலம்
சிறந்த நீளம் உள்ளது” ஏண் கூறுபவர்கள்
“ஊழிக்காலம் வரை தோண்டினாலும்
இப்படி ஒரு அகழி அமையாது” என அறியாதவர்கள்!
“இராவணனுக்கு அஞ்சியதால்
ஏழுகடல்களும்
இந்த நகருக்கு அகழியாக அமைந்தன போலும்”
என நினைத்தான் அனுமன்
பாடல்-242:
இராமனது புகழ் சூழ்ந்த உலகங்கள் யாவிலும்
தனது புகழ் பரப்பிய அனுமன்
சிறப்புமிக்க அந்த அகழியை அடைந்தான்
அப்போது அனுமனின் எண்ணம்:-
“முன்பு -
அடியேன் கடலைத்தாண்டிய வேகம் போல
இப்போது இரு மடங்கு கொண்டாலும் கடக்க முடியாது”
பாடல்-243:
அகலமான அந்த அகழி
வானத்து மேகங்களை
கடல் என ஏமாற வைத்தது
நீர் மொண்டு செல்ல அழைத்தது
ஒரு விதத்தில் -
அந்த அகழி இராவணன் சேனை போலவும் உள்ளது
வாய்ச் சொற்களால்
அகழி சிறப்புகளை சொல்லமுடியாது!
பாடல்-244:
அந்த அகழியில்
என்ன கிடைக்கும்?
யானைகளின் மூன்று வகை மதநீர்!
தேவமளின் குங்குமக் குழம்பு பூசிய கூந்தலுக்கான
அகில்புகை!
மலர்த் தேன்!
அகில் தோய்ந்த சந்தனக்குழம்பு!
பாடல்-245:
அந்த அகழியில் ஒலியெழுப்புவன
என்னென்ன பறவைகள்?
உன்னம்
நாரைகள்
மகன்றில்கள், குருகல்கள்
நீர்க்கோழிகள்
“பெரு நாரைகள்
சக்கரவாகங்கள்கின்னரங்கள் கொக்குகள்
சிலுங்கங்கள், மீன்கொத்திகள்
நீர்ப்பருந்துகள்
காகங்கள்
குணாலங்கள்!
பாடல்-246:
அகழியின் சிறப்பு கொஞ்சமா நஞ்சமா?
அழகு மகளிர் அகில் புகை
கஸ்தூரிப் புழுகும்
செம்பஞ்சுக் குழம்பு
அகழியில் கலந்து கலந்து சேர்ந்து சேர்ந்து
அதில் குளிக்கும் யானைகள்
புதிய மணமும் நிறமும் பெற்று
அதனால் -
பெண் யானைகளுக்கு சந்தேகம்!
அதனால் -
ஆண் யானைகளுடன் ஊடல்!
பாடல்-247:
இரவு நேரம் -
அகழியில் மலர்ந்திருந்த
தாமரை மலர்கள் குவிந்திருந்தன
அனுமன் நினைத்தான்
சீதையின் முகத்தோடு உறவுடைய இத்தாமரைகள்
சீதை முகம் வாடினால்
வாடி ஒடுங்கத்தானே செய்யும்!
பாடல்-248:
தெளிந்த மனமுடையவரும்
தெளியாத சிறியோரும்
ஒன்று கூடினால்
வேற்றுமை மறைந்து விடும்!
அது போல இருக்கின்றது -
பளிங்கு பதித்து ஒளி வீசும் அகழியின் கரையும்
அகழியின் நீர்ப்பரப்பும்!
பாடல்-249:
அகழிக்கரையின் மேல்பகுதியில்
நீலநிற வகை மணிகள் பதித்துள்ளனர்
அகழிக்கரையின் கீழ்ப்பகுதியில்
நித்திலம் முதலான மணிகள் பதித்துள்ளார்
அதனால் -
அகழி நீர்
பாற்கடலில்
பலநிறக்கடல்கள் கூடியது போல் உள்ளது!
பாடல்-250:
ஆச்சரியமில்லை!
முன்பு
கடல் கடந்தது போலவே
இப்போது -
அகழியும் தாண்டி விட்டான்!
மதிலும் தாண்டிவிட்டான்!
எவரும் நெருங்க முடியாத
மாநகர் அடைந்தான்
அங்கு நடந்தது குறித்து
அந்தத் தன்மை குறித்து
இனி அறிவோம்.
--அனுமனோடு மீட்போம்.
இராமனின் புகழ் -
செவிக்குத்தேன்! அதனைத்
திருந்தச் சொல்பவன் அனுமன்
திரும்பத் திரும்பச் சொல்பவன் அனுமன்
கோபத்தை அடக்கிக் கொண்டான்
“உறங்குகிற இவன் இராவணாக இருந்தாலும் இருக்கட்டும்
இன்னும் சில பகல்களே வாழப் போகிறான்!”
என அகன்றான் அனுமன்
பாடல்-227:
இராமனது அனைத்து புகழையும் தொகுத்தால்
அது அனுமனாகத்தான் இருக்கும்
அப்படிப்பட்ட அனுமன் தேடுகிறான் சீதையை
மாடங்களில்
கூடங்களில்
மாளிகைகளில்
மகளிர் ஆடல் அரங்குகளில்
அம்பலங்களில்
தேவர் ஆலயங்களில்
பாடல் மேடைகளில்
பட்டி மண்டபங்களில்!
பாடல்-228:
காற்று போல பரவித் தேடுகிறான் அனுமன்
நகர மாளிகை வாயில்களில்
சாளரத் தலங்களில்
மலர்களில்! அட!
மலர்களின் தண்டுக்குள்ளும் புகுந்து தேடுவான்
அந்தந்த இடத்துக்கு ஏற்ப
நுண்ணிய வடிவோ - பெருவடிவோ
அவன் அலைதல் கதியை - சிரமத்தை
யார் தான் சொல்ல முடியும்!
திருமால் -
மிகச்சிறிய அணுவிலும் உள்ளார்
மிகப்பெரிய மலையிலும் உள்ளார்
சீதை தேடும் அனுமனும் இப்போது
திருமால் போல்
அனைத்திலும் கலந்து தேடுகிறான்.
பாடல்-229:
ஏந்தல் அனுமன்
எல்லா இடங்களிலும் தேடினான்
காந்தள் மலர் என விரல்கள் கொண்ட
அனைத்து மங்கையரையும் பார்த்து வந்தான்
அலைந்தான் அலைந்தான்
கண்டான் ஒரு மாளிகை அது ஒரு மாளிகை
அரசர் , அசுரர், மேலுலகினர், கீழ் உலகினர்
யாவரும் விரும்பும் விபீஷணன் மாளிகை!
பாடல்-230:
ஆஹா ! கற்பக மரங்கள்!
அவற்றின் நிழலே ஆனந்தம்
அதிலும் அவை தேன் சொரியும் மரங்கள்
அதன் கீழே
விபீஷணன் மாளிகை இருக்கிறது
“அரக்கர்களின் கருமை நிறம் நடுவே
வெண்ணிறமாகிய நாம் வாழ்தல் கூடாது”
என எண்ணி விலகியதுபோல இருந்தது மாளிகை
தருமத்தைப் போன்ற
விபீஷணனை நெருங்கிக் கண்டான்.
பாடல்-231:
விபீஷணன் பண்பு நலன்களை
அவன் உணர்வுகளை
தன் உணர்வினால் உணர்ந்தான் அனுமன்
“குற்றமிலாத நற்குணத்தவன்” என உணர்ந்தான்
கோபம் நீக்கிய மனத்தினன் ஆகி
மலை போன்ற ஒரு கோடி மாடங்களில் புகுந்து
சீதையைத் தேடி முடித்தான்
பாடல்-232:
தேவமகளிர் பலரைக் கண்டான்
முழுமதி முகமும்
செந்நிறவாயும் உடைய பலரைக் கண்டான்
அவர்களில் சீதை இல்லை என அறிந்து
மாளிகைகள் கடந்தான்
தன் மன வேகமும் மீறும் அனுமன்
இப்போது -
இந்திரன் சிறையிருந்த
இந்திரஜித் மாளிகை வாசல் அடைந்தான்
பாடல்-233:
இந்திரன் வீட்டு வாசலில்
யார் யார் இருந்தார்கள்...
ஆயுதங்கள் ஏந்திய பெரும்கை உடையவர்கள்
கோரப்பற்கள் தெரிய சிரிப்பவர்கள்
மூதுரைகள் -பெரும் கதைகள்- விடுகதைகள் சொல்பவர்கள்
போர்க்களத்தில் கோபிப்பதில் மகிழ்ச்சி அடைபவர்கள் என
பல்லாயிரக்கணக்கானவர்கள் !
அவர்களைக் கடந்தான் அனுமன்.
பாடல்-234:
இந்திரஜித்
அழகிய மகளிர் மத்தியில் உறங்குகிறான்
“மூன்று கண் முக்கண்ணன் மகன்
ஆறுமுகன் -
ஆறுமுகங்களையும் பன்னிரு கைகளையும் மறைத்து
ஒரு முகமும் இருகரமுமாக தோன்றினானோ” என்று நினைத்து
அவன் அறையை நோக்கினான்
புகை நுழைய முடியாத இடத்திலும் புகுகிற அனுமன்.
பாடல்-235:
“குகை சிங்கம் போன்ற இந்திரஜித்
கோரைப்பற்கள் கொண்ட அரக்கர் மகனோ!
சிவனின் மகன் முருகனோ!
வேறு எவனோ!
அறிய முடியவ்¢ல்லையே
இராமனும் இலக்குவனும்
பல நாட்கள் இவனுடன் போர் நிகழ்த்த வேண்டியிருக்கும்”
பாடல்-236:
இந்திரஜித்தை தனது இனிய மகன் எனப்பெற்றதால்
இராவணன் மூவுலகமும் வென்றது அரிய செயலென
வர்ணிக்க முடியாது
அது எளிய செயல்களில் ஒன்று!
சிவன் - பிரம்மன் - திருமால்
இந்திரஜித்துக்கு ஒப்பானவர்கள்!
மற்றவர்களோடு ஒப்பிடுதல்
அறிவுடைமை அல்ல.
பாடல்-237:
அனுமன் -
இப்படியெல்லாம் நினைத்து
“அறிவுடைமை ஆகாது” என்பதை
சைகையிலும் காட்டினான்
“இங்கு இந்திரஜித்திடம் வீணே காலம் கழிப்பது நல்லதல்ல
என நினைத்து நகர்ந்தான்
ஆயிரம் ஆயிரம் மாளிகைகளிலும்
சந்தேகத்திற்கு இடமில்லாவிட்டாலும்
துருவ்¢த் துருவி தேடினான்.
பாடல்-238:
அனுமன் யார்?
இராமனின் திருவடி போல் புகழ் கொண்டவன்!
அட்சகுமாரனது வீடு தாண்டி
அதிகாயன் மாளிகையிலும்
போர் வீரர்கள் நடுவிலும்
ஆலோசனைக்குரிய அமைச்சர்கள் வீட்டிலும்
தாவிக்குதித்து
உட்புகுந்து தீவிரமாக தேடுகிறான்.
பாடல்-239:
மிகப்பெரிய படைத்தலைவன் இருப்பிடமான
ஆயிரம் கோடி பொன் மாளிகையில் தேடுகிறான்
அழியாத இலங்கையில் மறைவான இடம் இராவணனுடையது
அங்கும் தேடினான்
மூன்று அகழிகளில் நடுவில் உள்ள அகழி அடைந்தான்
தேவி கிட்டவில்லை!
பாடல்-240:
ஒப்பற்ற மதயானைக்கு துணையில்லை
அனுமனும் அப்படியே!
அனுமன் பாய்ந்த போது
அகழி கண்ணுக்கு தென்பட்டது
அனுமன் நினைத்தான்:-
“என்னால் எளிதில் பெருங்கடல்
தாண்டப்பட்டது
அந்த அவமானம் தாளாத கடலரசன்
என்னால் தாண்ட முடியாதபடி இப்போது
ஏழு கடல்களையும் ஒன்றாக அமைத்து விட்டான்”
பாடல்-241:
“இந்த அகழிக்கு -
சிறந்த அகலம்
சிறந்த நீளம் உள்ளது” ஏண் கூறுபவர்கள்
“ஊழிக்காலம் வரை தோண்டினாலும்
இப்படி ஒரு அகழி அமையாது” என அறியாதவர்கள்!
“இராவணனுக்கு அஞ்சியதால்
ஏழுகடல்களும்
இந்த நகருக்கு அகழியாக அமைந்தன போலும்”
என நினைத்தான் அனுமன்
பாடல்-242:
இராமனது புகழ் சூழ்ந்த உலகங்கள் யாவிலும்
தனது புகழ் பரப்பிய அனுமன்
சிறப்புமிக்க அந்த அகழியை அடைந்தான்
அப்போது அனுமனின் எண்ணம்:-
“முன்பு -
அடியேன் கடலைத்தாண்டிய வேகம் போல
இப்போது இரு மடங்கு கொண்டாலும் கடக்க முடியாது”
பாடல்-243:
அகலமான அந்த அகழி
வானத்து மேகங்களை
கடல் என ஏமாற வைத்தது
நீர் மொண்டு செல்ல அழைத்தது
ஒரு விதத்தில் -
அந்த அகழி இராவணன் சேனை போலவும் உள்ளது
வாய்ச் சொற்களால்
அகழி சிறப்புகளை சொல்லமுடியாது!
பாடல்-244:
அந்த அகழியில்
என்ன கிடைக்கும்?
யானைகளின் மூன்று வகை மதநீர்!
தேவமளின் குங்குமக் குழம்பு பூசிய கூந்தலுக்கான
அகில்புகை!
மலர்த் தேன்!
அகில் தோய்ந்த சந்தனக்குழம்பு!
பாடல்-245:
அந்த அகழியில் ஒலியெழுப்புவன
என்னென்ன பறவைகள்?
உன்னம்
நாரைகள்
மகன்றில்கள், குருகல்கள்
நீர்க்கோழிகள்
“பெரு நாரைகள்
சக்கரவாகங்கள்கின்னரங்கள் கொக்குகள்
சிலுங்கங்கள், மீன்கொத்திகள்
நீர்ப்பருந்துகள்
காகங்கள்
குணாலங்கள்!
பாடல்-246:
அகழியின் சிறப்பு கொஞ்சமா நஞ்சமா?
அழகு மகளிர் அகில் புகை
கஸ்தூரிப் புழுகும்
செம்பஞ்சுக் குழம்பு
அகழியில் கலந்து கலந்து சேர்ந்து சேர்ந்து
அதில் குளிக்கும் யானைகள்
புதிய மணமும் நிறமும் பெற்று
அதனால் -
பெண் யானைகளுக்கு சந்தேகம்!
அதனால் -
ஆண் யானைகளுடன் ஊடல்!
பாடல்-247:
இரவு நேரம் -
அகழியில் மலர்ந்திருந்த
தாமரை மலர்கள் குவிந்திருந்தன
அனுமன் நினைத்தான்
சீதையின் முகத்தோடு உறவுடைய இத்தாமரைகள்
சீதை முகம் வாடினால்
வாடி ஒடுங்கத்தானே செய்யும்!
பாடல்-248:
தெளிந்த மனமுடையவரும்
தெளியாத சிறியோரும்
ஒன்று கூடினால்
வேற்றுமை மறைந்து விடும்!
அது போல இருக்கின்றது -
பளிங்கு பதித்து ஒளி வீசும் அகழியின் கரையும்
அகழியின் நீர்ப்பரப்பும்!
பாடல்-249:
அகழிக்கரையின் மேல்பகுதியில்
நீலநிற வகை மணிகள் பதித்துள்ளனர்
அகழிக்கரையின் கீழ்ப்பகுதியில்
நித்திலம் முதலான மணிகள் பதித்துள்ளார்
அதனால் -
அகழி நீர்
பாற்கடலில்
பலநிறக்கடல்கள் கூடியது போல் உள்ளது!
பாடல்-250:
ஆச்சரியமில்லை!
முன்பு
கடல் கடந்தது போலவே
இப்போது -
அகழியும் தாண்டி விட்டான்!
மதிலும் தாண்டிவிட்டான்!
எவரும் நெருங்க முடியாத
மாநகர் அடைந்தான்
அங்கு நடந்தது குறித்து
அந்தத் தன்மை குறித்து
இனி அறிவோம்.
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment