பாடல்-176:
பொங்கும் அனல் போன்ற
புகை கக்கும் கண்கள் உடைய
இலங்கை தேவி -
“அறிவற்றவனே!
தகுதியற்றதைச் செய்ய
உனக்கு பயமில்லை போலும்
இலையும் வேரும் தின்று திரியும் வானரங்களிடம்
எனக்கு கோபம் தேவையில்லை
வலிமையும் வனப்பும் கொண்ட
மதிலை நோக்கிக் கொண்டே
இந்தப் பொன்மதிலைத் தாவி
என்னை பகைக்காதே! செல்!” என்றாள்.
பாடல்-177:
இலட்சியம் எடுத்தவர்கள் மனதில்
களிப்பில் மூழ்கும் செயல்கள் குறைவே!
அனுமன் அப்படித்தான் செயல்பட்டான்
கோபம் வெளிப்படாமல் அடக்கி
நீதியின் நலத்தினாலே
செய்ய வேண்டியன எவை என நினைத்தான்
அதனால் அவளை அழைத்து
“ஊரைக்காண ஆசை
எளியவன் நான் சென்றால்
உனக்கென்ன நஷ்டம்!” என்றான் மகா வலியவன்.
பாடல்-178:
அனுமன் சொல்லி முடிக்கும்முன்
அக்கினி வார்த்தைகள் அவள் சொன்னாள்
“போ” என்றதும் போகாமல்
எதிர் சொல் சொல்கிறாயே நீ யாரடா!
திரிபுரம் எரித்தவனே அஞ்சுகின்ற இடம் இது
ஆசைப்பட்டதும் பார்க்க முடிகின்ற ஊரா இது!”
என்று நகைத்தாள்.
பாடல்-179:
இலங்காதேவி வெளிப்படச் சிரித்தாள்
அனுமனோ தனக்குள் சிரித்தான்
அதுவும் அவள் உணர்ந்துவிட்டாள்!
“நீ யார்!
யார் சொல்லி வந்தாய்?
உனது உயிர் பிரிவதால் உனக்கு என்ன பயன்?
ஓடி விடு” என்றதும் -
“இனி -
இவ்வூரில் புகாமல் திரும்பமாட்டேன்” என்றான்
புகழ் கொண்டான்!
பாடல்-180:
“இவன் வஞ்ச உருவில் வந்தவன்
இவன் வானரம் அல்ல
எமனும் என்னைக் கண்டால் சோர்வானே
இவனோ
பாற்கடல் விஷம் குடித்த சிவன் போலச் சிரிக்கிறானே..”
அனுமனின் நெஞ்சம் புரிந்தாள்
கற் சிலை என திகைத்துவிட்டாள்.
பாடல்-181:
“கொல்வதேவழி ! இல்லையேல்
இவ்வூர் இறுதிக்காலம் அடையும்” என நினைத்தான்
“வென்று விடு நீ!
இல்லையேல் வெளியேறு” என
தன் விழிகலளில் நெருப்பு வைத்தாள்
தன் வாயினிலும் நெருப்பு கொண்டாள்
இரண்டு நெருப்புகளை அனுமன் மீது
வீசும் முன்
மூவிலை சூலத்தை
“செல்க” என செலவிட்டாள்!
பாடல்-182:
அனுமன் நினைத்த எண்ணம் எதுவும்
பிழையாக ஆனதில்லை
நெருப்பு வேல் எதிரில் வந்ததும்
பாம்பைக் கவ்வும் கருடன்போல
கைகளால் பிடித்து ஒடித்தான்
தேவர்கள் மகிழ்ந்தனர்
இலங்காதேவியோ திடுக்கிட்டாள்
பாடல்-183:
அவள் எறிந்த சூலம் காணாமல் போனது
நெருப்பை ஒத்த அவள்
இன்னும் பல ஆயுதங்கள் வீசினாள்
அவளை அழிக்காமல்
அவளது ஆயுதங்களை மட்டும்
முழுதுமாக
விண்ணில் வீசி அழித்தான் அனுமன்.
பாடல்-184:
தெய்வத்தன்மையுள்ள
தெய்வப்பல்படை காணாமல் போனது
மலை வானில் முழங்கும் மேகமென
கோபமும் முழக்கமும் செய்தான்
தாயத்தில் சுண்டும் கழற்சிக்காய்களைப் போல
குன்றுகளையே ஆட்ட வல்ல
தனது கரங்களால்
செந்தீப்பொறி எழ
அனுமனை அடித்தாள்.
பாடல்-185:
இலங்கைதேவி அடிக்கும் முன்பே
அவளது எட்டு கைகளையும்
தனது ஒரே கையால் பிடித்து
“என்ன செய்வது! இவள் பெண்!
கொல்வது பிழை!” என
அவளது ஒடியாத நெஞ்சில் ஒரு அடி தந்தான்
இடி உண்ட மலை போல
உயிரோடு மண்ணில் வீழ்ந்தாள் சரிந்து.
பாடல்-186:
விழுந்தாள்
நொந்தாள்
சிவப்புக்குருதி வெள்ளத்தில் மூழ்கினாள்
எழுந்து நின்றாள்
பிரம்மனின் அருள் நினைத்து எழுந்தாள்
அனைத்து உலகமும் தொழும்
இராமநாயகன் தாள் தொழும் வீரனாகிய
அனுமன் முன்நின்று கூறினாள் இதுதான்:-
பாடல்-187:
“ஐயனே! இதைக்கேள்
பிரம்மனின் அருள் ஆணையால்
இந்த மூதூர் இலங்கை காக்கின்றேன்
இலங்கை மாதேவி என் பெயர்
செய்தொழில் இழுக்கினாலே
உன்னுடன் சிறுமையாய் போர் செய்தேன்
“பிழைத்துப்போ” என உயிர் பிச்சை இட்டால்
உண்மை உணர்த்துவேன்” என்றான்.
பாடல்-188:
“எத்தனை காலம்
இலங்கை நகரைக் காக்க வேண்டும்?”
கேட்டேன் பிரம்மனை
“வலிமை பெற்ற குரங்கு ஒன்று
கையினால் அடிக்கும்! வருத்தும்”
அன்று நீ
இலங்கை விட்டு என்னைக் காண்பாய்
அதன் பின்
இலங்கை சிதையும் திண்ணமாக” என்று
பிரம்மன் சொன்னான்.
பாடல்-189:
“ஐயனே!
பிரம்மன் சொன்னதே நடந்தது
அறம் வெல்லும் பாவம் தோற்கும்
என்று இயம்பவும் வேண்டுமோ
இனி மேல் -
நீ நினைப்பது யாவும் நடக்கும்
உன்னால் முடிக்க முடியாதது இல்லை
பொன் நகராம் இலங்கையுள் புகுக”
புகழ்ந்தாள் வணங்கினாள் புறப்பட்டாள்.
பாடல்-190:
அனுமன் மகிழ்ந்தான்
வாய்மையே வெல்லும் என
ஆரியன் இராமனின் கமலபாதம்
அகத்தில் வணங்கினான்
இழிந்தவர் வாழும் இலங்கையின்
பொன் மதிலில் தாவிப் புகுந்தான்
சிறந்த பாலில்
சிறிது மோர் தெறித்தது போல!
அவ்வளவு நுண்ணியமாக!
பாடல்-191:
இலங்கையில் மட்டும்
இரவும் பகலே!
ஆம் -
வானைத் தொடும் மாளிகையின் மணிகள்
சிந்தும் வெளிச்சம் அது!
அதனைக்கண்ட அனுமனுக்கும் தடுமாற்றம்
ஆம் -
“ஒற்றைச்சக்கரத் தேராகிய சூரியன்
உதயமாகி விட்டானோ!” என்பதே
அந்தத் தடுமாற்றம்.
பாடல்-192:
“தன்னைச்சுற்றிலும் இத்தனை ஒளி உள்ளது என்று
இலங்கை அறிந்தால்
தானே -
தனது இருளைநீக்கிக் கொள்ளும்
நாம் செல்வது வெட்ககரமானது”
இப்படி நினைத்தது சூரியன்!
“ஒரு வேளை -
சூரியன் செல்லுமாயின்
மின்மினி என உணரும்”
இப்படி அனுமன் நினைத்தான்.
பாடல்-193:
பசும்பொன் மலை போல இருந்தது மதில் !
அதன் நடுவே
அழகான ஒளிமாடங்கள்
ஒளி உமிழ்வதால்
இலங்கையில் மட்டும்
உண்மையான இருள் இல்லை.
பாடல்-194:
ஒளி மிகுந்த வீதிகளில்
அனுமனின் தோற்றம் பயணப்பட்டால்
கண்டுபிடிக்கக்கூடும்
அனுமனின் ஒரு தோள்
அமுதம் கடைந்த மந்தரமலை போன்றது
இன்னொரு தோளோ
இராமனின் புகழ்போல் உள்ளது
“வீதி நடுவில் போவது பிழை” என உணர்ந்து
தனது பெரிய திருமேனி சுருக்கினான்
வீதி ஓரம் சென்றான்
மானுட விதி திருத்தும் அனுமன்!
பாடல்-195:
தேனுக்காக
பூக்களைத் தேடித் தேடி அலையும்
வண்டினம் போலத் தேடுகிறான் அனுமன்!
கருங்கடலைக் கடந்த அனுமனின் கால்கள்
இப்போது சீதைக்காக நடக்கின்றன
பசுக்கள் நிரம்பிய கொட்டில்கள்!
யானைக்கூடங்கள்!
தேர் மாடங்கள்!
குதிரை லாயங்கள்!
எல்லா இடமும் அலைகின்றது
அனுமன் எனும் தும்பி!
பாடல்-196:
சுவர் வரிசைகளில் பதித்த மணிகள்
நட்சத்திர ஒளியோடு மின்னுகின்றன
அன்புள்ளோர்க்கு அனுமன் எளியன்
அதனால் எளியனாகத் தெரிந்தான்!
அன்பிலார்க்கு அரியன்
அதனால் திருமால் போலத் தெரிந்தான்!
நீலமணி வெளிச்சத்தில் கருநிறத்தனாக தெரிகின்றான்
மாணிக்க ஒளியில்
செந்நிறத்தனாகத் தெரிகின்றான்
பாடல்-197:
சீதையைத் தேடிச் செல்லும் வழியில்
காட்டுமயில்கள் போல
களிக்கும் அன்னங்கள் போல
அரக்க மகளிர் தெரிந்தனர்
ஏன் எனில்
அரக்கிகள் நீராடுவது
ஆகாயகங்கை நீரில்!
தேன் சோலையில் தேவமகளிர் நீராட்டுகின்றனர்
அதனால் அரக்கி முகங்கள்
செந்தாமரை மலர்கள் போல பொலிவாகவும் உள்ளது.
பாடல்-198:
கச்சணிந்த முலைகளின் பாரம்
தாங்காத நுண்ணிய இடையோடு
தேவமகளிர் நீர்க்குடம் சுமந்து
அரக்க மகளிரை நீராட்டுவதைக் கண்ட அனுமன்
நினைத்தான் இதனை:-
“சேர்த்து வைக்க விரும்புவோர்
தவத்தை சேமியுங்கள்
செல்வம் அல்ல!
விதிக்கடவுளின் வழி இதுவே ! ”
பாடல்-199:
அனுமன் தேடல் தொடர்ந்தது
இசை இலக்கணப்படி
ஏழுவகை நரம்புகளை உடையது யாழ்
அதனை
அரக்க மகளிர்
செம்பஞ்சு குழம்பு பூசிய
தளிர்க்கரம் வருந்துமளவு இசைத்தனர்
அந்த இசையை மேகத்தின் முழக்கம் தடுக்கும் என அஞ்சி
மேகத்தின் வாயை பொத்தும்
பணிப்பெண்டிரைக் கண்டான் அனுமன்.
பாடல்-200:
அனுமன் இன்னொன்றும் கண்டான்
அவரவர் நினைப்பை பலிக்கச் செய்யும்
சிந்தாமணி விளக்கு ஒளிர்ந்தது
மலர்களின் பந்தல்
பொன்மயமான நாடக அரங்கம்
அதில் பாடுவோர் இருந்தனர்
கந்தர்வ மகளிர் ஆடல் விதிப்படி ஆடினர்
அந்த நடனத்தை அரக்க மகளிர்
படுக்கையில் இருந்தபடி ரசிக்கின்றனர்.
--அனுமனோடு மீட்போம்.
பொங்கும் அனல் போன்ற
புகை கக்கும் கண்கள் உடைய
இலங்கை தேவி -
“அறிவற்றவனே!
தகுதியற்றதைச் செய்ய
உனக்கு பயமில்லை போலும்
இலையும் வேரும் தின்று திரியும் வானரங்களிடம்
எனக்கு கோபம் தேவையில்லை
வலிமையும் வனப்பும் கொண்ட
மதிலை நோக்கிக் கொண்டே
இந்தப் பொன்மதிலைத் தாவி
என்னை பகைக்காதே! செல்!” என்றாள்.
பாடல்-177:
இலட்சியம் எடுத்தவர்கள் மனதில்
களிப்பில் மூழ்கும் செயல்கள் குறைவே!
அனுமன் அப்படித்தான் செயல்பட்டான்
கோபம் வெளிப்படாமல் அடக்கி
நீதியின் நலத்தினாலே
செய்ய வேண்டியன எவை என நினைத்தான்
அதனால் அவளை அழைத்து
“ஊரைக்காண ஆசை
எளியவன் நான் சென்றால்
உனக்கென்ன நஷ்டம்!” என்றான் மகா வலியவன்.
பாடல்-178:
அனுமன் சொல்லி முடிக்கும்முன்
அக்கினி வார்த்தைகள் அவள் சொன்னாள்
“போ” என்றதும் போகாமல்
எதிர் சொல் சொல்கிறாயே நீ யாரடா!
திரிபுரம் எரித்தவனே அஞ்சுகின்ற இடம் இது
ஆசைப்பட்டதும் பார்க்க முடிகின்ற ஊரா இது!”
என்று நகைத்தாள்.
பாடல்-179:
இலங்காதேவி வெளிப்படச் சிரித்தாள்
அனுமனோ தனக்குள் சிரித்தான்
அதுவும் அவள் உணர்ந்துவிட்டாள்!
“நீ யார்!
யார் சொல்லி வந்தாய்?
உனது உயிர் பிரிவதால் உனக்கு என்ன பயன்?
ஓடி விடு” என்றதும் -
“இனி -
இவ்வூரில் புகாமல் திரும்பமாட்டேன்” என்றான்
புகழ் கொண்டான்!
பாடல்-180:
“இவன் வஞ்ச உருவில் வந்தவன்
இவன் வானரம் அல்ல
எமனும் என்னைக் கண்டால் சோர்வானே
இவனோ
பாற்கடல் விஷம் குடித்த சிவன் போலச் சிரிக்கிறானே..”
அனுமனின் நெஞ்சம் புரிந்தாள்
கற் சிலை என திகைத்துவிட்டாள்.
பாடல்-181:
“கொல்வதேவழி ! இல்லையேல்
இவ்வூர் இறுதிக்காலம் அடையும்” என நினைத்தான்
“வென்று விடு நீ!
இல்லையேல் வெளியேறு” என
தன் விழிகலளில் நெருப்பு வைத்தாள்
தன் வாயினிலும் நெருப்பு கொண்டாள்
இரண்டு நெருப்புகளை அனுமன் மீது
வீசும் முன்
மூவிலை சூலத்தை
“செல்க” என செலவிட்டாள்!
பாடல்-182:
அனுமன் நினைத்த எண்ணம் எதுவும்
பிழையாக ஆனதில்லை
நெருப்பு வேல் எதிரில் வந்ததும்
பாம்பைக் கவ்வும் கருடன்போல
கைகளால் பிடித்து ஒடித்தான்
தேவர்கள் மகிழ்ந்தனர்
இலங்காதேவியோ திடுக்கிட்டாள்
பாடல்-183:
அவள் எறிந்த சூலம் காணாமல் போனது
நெருப்பை ஒத்த அவள்
இன்னும் பல ஆயுதங்கள் வீசினாள்
அவளை அழிக்காமல்
அவளது ஆயுதங்களை மட்டும்
முழுதுமாக
விண்ணில் வீசி அழித்தான் அனுமன்.
பாடல்-184:
தெய்வத்தன்மையுள்ள
தெய்வப்பல்படை காணாமல் போனது
மலை வானில் முழங்கும் மேகமென
கோபமும் முழக்கமும் செய்தான்
தாயத்தில் சுண்டும் கழற்சிக்காய்களைப் போல
குன்றுகளையே ஆட்ட வல்ல
தனது கரங்களால்
செந்தீப்பொறி எழ
அனுமனை அடித்தாள்.
பாடல்-185:
இலங்கைதேவி அடிக்கும் முன்பே
அவளது எட்டு கைகளையும்
தனது ஒரே கையால் பிடித்து
“என்ன செய்வது! இவள் பெண்!
கொல்வது பிழை!” என
அவளது ஒடியாத நெஞ்சில் ஒரு அடி தந்தான்
இடி உண்ட மலை போல
உயிரோடு மண்ணில் வீழ்ந்தாள் சரிந்து.
பாடல்-186:
விழுந்தாள்
நொந்தாள்
சிவப்புக்குருதி வெள்ளத்தில் மூழ்கினாள்
எழுந்து நின்றாள்
பிரம்மனின் அருள் நினைத்து எழுந்தாள்
அனைத்து உலகமும் தொழும்
இராமநாயகன் தாள் தொழும் வீரனாகிய
அனுமன் முன்நின்று கூறினாள் இதுதான்:-
பாடல்-187:
“ஐயனே! இதைக்கேள்
பிரம்மனின் அருள் ஆணையால்
இந்த மூதூர் இலங்கை காக்கின்றேன்
இலங்கை மாதேவி என் பெயர்
செய்தொழில் இழுக்கினாலே
உன்னுடன் சிறுமையாய் போர் செய்தேன்
“பிழைத்துப்போ” என உயிர் பிச்சை இட்டால்
உண்மை உணர்த்துவேன்” என்றான்.
பாடல்-188:
“எத்தனை காலம்
இலங்கை நகரைக் காக்க வேண்டும்?”
கேட்டேன் பிரம்மனை
“வலிமை பெற்ற குரங்கு ஒன்று
கையினால் அடிக்கும்! வருத்தும்”
அன்று நீ
இலங்கை விட்டு என்னைக் காண்பாய்
அதன் பின்
இலங்கை சிதையும் திண்ணமாக” என்று
பிரம்மன் சொன்னான்.
பாடல்-189:
“ஐயனே!
பிரம்மன் சொன்னதே நடந்தது
அறம் வெல்லும் பாவம் தோற்கும்
என்று இயம்பவும் வேண்டுமோ
இனி மேல் -
நீ நினைப்பது யாவும் நடக்கும்
உன்னால் முடிக்க முடியாதது இல்லை
பொன் நகராம் இலங்கையுள் புகுக”
புகழ்ந்தாள் வணங்கினாள் புறப்பட்டாள்.
பாடல்-190:
அனுமன் மகிழ்ந்தான்
வாய்மையே வெல்லும் என
ஆரியன் இராமனின் கமலபாதம்
அகத்தில் வணங்கினான்
இழிந்தவர் வாழும் இலங்கையின்
பொன் மதிலில் தாவிப் புகுந்தான்
சிறந்த பாலில்
சிறிது மோர் தெறித்தது போல!
அவ்வளவு நுண்ணியமாக!
பாடல்-191:
இலங்கையில் மட்டும்
இரவும் பகலே!
ஆம் -
வானைத் தொடும் மாளிகையின் மணிகள்
சிந்தும் வெளிச்சம் அது!
அதனைக்கண்ட அனுமனுக்கும் தடுமாற்றம்
ஆம் -
“ஒற்றைச்சக்கரத் தேராகிய சூரியன்
உதயமாகி விட்டானோ!” என்பதே
அந்தத் தடுமாற்றம்.
பாடல்-192:
“தன்னைச்சுற்றிலும் இத்தனை ஒளி உள்ளது என்று
இலங்கை அறிந்தால்
தானே -
தனது இருளைநீக்கிக் கொள்ளும்
நாம் செல்வது வெட்ககரமானது”
இப்படி நினைத்தது சூரியன்!
“ஒரு வேளை -
சூரியன் செல்லுமாயின்
மின்மினி என உணரும்”
இப்படி அனுமன் நினைத்தான்.
பாடல்-193:
பசும்பொன் மலை போல இருந்தது மதில் !
அதன் நடுவே
அழகான ஒளிமாடங்கள்
ஒளி உமிழ்வதால்
இலங்கையில் மட்டும்
உண்மையான இருள் இல்லை.
பாடல்-194:
ஒளி மிகுந்த வீதிகளில்
அனுமனின் தோற்றம் பயணப்பட்டால்
கண்டுபிடிக்கக்கூடும்
அனுமனின் ஒரு தோள்
அமுதம் கடைந்த மந்தரமலை போன்றது
இன்னொரு தோளோ
இராமனின் புகழ்போல் உள்ளது
“வீதி நடுவில் போவது பிழை” என உணர்ந்து
தனது பெரிய திருமேனி சுருக்கினான்
வீதி ஓரம் சென்றான்
மானுட விதி திருத்தும் அனுமன்!
பாடல்-195:
தேனுக்காக
பூக்களைத் தேடித் தேடி அலையும்
வண்டினம் போலத் தேடுகிறான் அனுமன்!
கருங்கடலைக் கடந்த அனுமனின் கால்கள்
இப்போது சீதைக்காக நடக்கின்றன
பசுக்கள் நிரம்பிய கொட்டில்கள்!
யானைக்கூடங்கள்!
தேர் மாடங்கள்!
குதிரை லாயங்கள்!
எல்லா இடமும் அலைகின்றது
அனுமன் எனும் தும்பி!
பாடல்-196:
சுவர் வரிசைகளில் பதித்த மணிகள்
நட்சத்திர ஒளியோடு மின்னுகின்றன
அன்புள்ளோர்க்கு அனுமன் எளியன்
அதனால் எளியனாகத் தெரிந்தான்!
அன்பிலார்க்கு அரியன்
அதனால் திருமால் போலத் தெரிந்தான்!
நீலமணி வெளிச்சத்தில் கருநிறத்தனாக தெரிகின்றான்
மாணிக்க ஒளியில்
செந்நிறத்தனாகத் தெரிகின்றான்
பாடல்-197:
சீதையைத் தேடிச் செல்லும் வழியில்
காட்டுமயில்கள் போல
களிக்கும் அன்னங்கள் போல
அரக்க மகளிர் தெரிந்தனர்
ஏன் எனில்
அரக்கிகள் நீராடுவது
ஆகாயகங்கை நீரில்!
தேன் சோலையில் தேவமகளிர் நீராட்டுகின்றனர்
அதனால் அரக்கி முகங்கள்
செந்தாமரை மலர்கள் போல பொலிவாகவும் உள்ளது.
பாடல்-198:
கச்சணிந்த முலைகளின் பாரம்
தாங்காத நுண்ணிய இடையோடு
தேவமகளிர் நீர்க்குடம் சுமந்து
அரக்க மகளிரை நீராட்டுவதைக் கண்ட அனுமன்
நினைத்தான் இதனை:-
“சேர்த்து வைக்க விரும்புவோர்
தவத்தை சேமியுங்கள்
செல்வம் அல்ல!
விதிக்கடவுளின் வழி இதுவே ! ”
பாடல்-199:
அனுமன் தேடல் தொடர்ந்தது
இசை இலக்கணப்படி
ஏழுவகை நரம்புகளை உடையது யாழ்
அதனை
அரக்க மகளிர்
செம்பஞ்சு குழம்பு பூசிய
தளிர்க்கரம் வருந்துமளவு இசைத்தனர்
அந்த இசையை மேகத்தின் முழக்கம் தடுக்கும் என அஞ்சி
மேகத்தின் வாயை பொத்தும்
பணிப்பெண்டிரைக் கண்டான் அனுமன்.
பாடல்-200:
அனுமன் இன்னொன்றும் கண்டான்
அவரவர் நினைப்பை பலிக்கச் செய்யும்
சிந்தாமணி விளக்கு ஒளிர்ந்தது
மலர்களின் பந்தல்
பொன்மயமான நாடக அரங்கம்
அதில் பாடுவோர் இருந்தனர்
கந்தர்வ மகளிர் ஆடல் விதிப்படி ஆடினர்
அந்த நடனத்தை அரக்க மகளிர்
படுக்கையில் இருந்தபடி ரசிக்கின்றனர்.
--அனுமனோடு மீட்போம்.
No comments:
Post a Comment