Saturday, 4 May 2013

பாடல்:3

அழிவில்லாதவன் அனுமன்
மகேந்திர மலையில் குதிக்கிறான்
என்ன ஆயிற்று!
நீல நிற மலை அது நொறுங்கியது
மலை அடிவாரத்திலிருந்த  விஷப்பல் பாம்புகள்
குடல் அமுக்கப்பட்டவன் வாயிலிருந்து
வெளிவருவதுபோல வெளியேறி ஓடின!



பாடல் - 4
 மலையின் அடிவார குகையில்
உறங்கிய சிங்கங்கள்
அனுமன் குதிப்பால் இரத்தம் கக்கி
குகை உள்ளேயே இறந்தன

பறவைகளெல்லாம்
என்ன செய்தி என்று அறியாமல் அலறின
உலகம் அழியும்போது பொங்கும் கடல் ஒலியும் தாண்டி
அந்த சத்தம் கேட்டது

பறவைகள் பறந்தன
பயந்து பயந்து பறந்தன
வானத்தின் பரப்பு முழுதும் பறவைகளே நிரம்பின
வான் பறவை என்பது மாறி
பறவை வானம் ஆயிற்று!

No comments:

Post a Comment