Saturday 4 May 2013

சுந்தரகாண்டம்

ஓம் சிவாயநம. சிவசக்தியே துணை. மக்கள் இப்போது கஷ்டத்தில் இருக்கிறார்கள். வெயிலின் சுமையை தாங்கிக்கொண்டு இயல்பான வாழ்க்கை வாழ வேண்டி உள்ளது.
முக்கியமான உறவுகளிடம் கூட தமது அந்தரங்கத்தை சொல்லி அழவோ தேறிக்கொள்ளவோ பேச்சு இல்லாமல் போனது. இந்த மோசம் நிகழ, பொருளாதார தேவைகள் காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால் பொருள் சம்பாத்யம் ஒரு எல்லை தான். மீண்டும் நாம் நமது மன வட்டத்துக்குள் வந்து கோழிபோல் அடைந்துகொள்வோம். ஆறுதல் தேடுவோம். மன நிலை முடக்கம் ஏற்படுமுன், நாம் ஏற்படுத்தி வைத்த சொந்த பந்தங்கள் நம் குறைதாங்குமா என்ற ஏக்கம் வரும். அதில் மிகமிக முக்கியமானது
திருமண உறவே. வாலிபம் தாண்டிய வாழ்வில், நிலைத்த வருமானமும் அமைந்து ஆனால் ஆணுக்கு ஒரு பெண் தோழமை இல்லாமலும், பெண்ணுக்கு வேறு சில பல
சிக்கல்களால் ஆணின் அண்மை கிட்டாமல் திருமணம் தள்ளிப்போகிறது. ஒரே உண்மையின் இரு பாகங்களாகவே எனக்கு ஆணும் பெண்ணும் தோன்றுகிறார்கள். இப்படிப்பட்ட கஷ்டத்தில் இருக்கும் யுவன் யுவதிகளுக்காகவே கம்பன் எழுதிய இராமயணத்தில் சுந்தரகாண்டம் என்கிற வலிமையான பகுதியை புதுக்கவிதை ஆக்குகிறேன். நிச்சயம் நல்ல வரன் அமையும். என் பிரார்த்னை இதுவே. ஒரு நல்ல சமூகம் அமைய எங்கோ வாழும் ஒரு நல்ல கம்பீரமான ஆணும் கம்பீரமான பெண்ணும் ஒன்று சேர அனுமன் பட்ட பயணத்தை மகா கவி கம்பரின் அழகு தமிழ் சுந்தரகாண்டம் பேசுகிறது. வாருங்கள். என்னோடு வாருங்கள். ஓம்சக்தி.  
_____________ 

கடவுள் வாழ்த்து

காண்பது -
மாலையா ?பாம்பா? என்று
மனதிற்கு திரிபு தருகிறது பிறவி
மயங்க வைத்து உண்மை மறைப்பது  பிறவி

பஞ்சபூதங்களின் சேர்க்கை
இந்தப் பிறவி

வேறுபாடுகளையே காண்பது
இந்தப் பிறவி

இப்பிறவியால் வீங்கிபோய் விட்டேன் ஐயா
எந்தவினையும்
உனது வில்லினைக் கண்டால் கலங்கும் ஐயா
வேதங்களின் எல்லையே உமக்கு வணக்கம்!

______________ 


கடல் தாவு படலம்


1.

மகேந்திர மலை மீது  நிற்கிறான் அனுமன்
தேடுகிறான்
சிந்தனைக் குதிரை தேடுகிறது இலங்கையை
நிற்பதோ மகேந்திர மலை உச்சியில்
இது இலங்கை அல்ல
தீர்மானிக்கிறான்
மயில் போன்ற சீதை இங்கே இல்லை-
பயணம் தொடர்கிறது

தேடுகிறவர்களின் சிகரம் அனுமனே!
எது வேண்டும் என்பதையே
சிந்திக்க வல்ல அனுமனால் மட்டுமே முடிகிறது
வேண்டாம் இந்த மலை என விலக்கிட!



                                                                      -தொடரும்








1 comment:

  1. தேடுகிறவர்களின் சிகரம் அனுமனே!//

    கம்பரின் தமிழ் நண்பரின் தமிழில்!!

    ReplyDelete