பாடல்-86:
மாண்டாள் அரக்கி -
வாயிலிருந்து வயிறு வரை கிழித்தான் அனுமன்
மேருமலை
தனக்கு கீழே இருக்கும்படி
உயரம் சென்று
நினைக்கும் வேகமும் தாண்டிய வேகமுடன்
சூரியப் பாதை வழியில் போனான்.
பாடல்-87:
“இத்தனை பெரியது கடல்” என்று
சொன்னதைக் காட்டிலும்
கடல் பெரிதாய் இருக்கிறது
அளவிட முடியாத வானப்பரப்பில் -
இது போல் துன்பம் எது நேர்ந்தாலும்
கவலையுறக் கூடாது என உணர்ந்தான் அனுமன்
இலங்கை அடைய வேண்டும் இடையூறு தீரும்”
என உணர்ந்தான் அனுமன்.
பாடல்-88:
துன்பங்கள் கடுமையானவை
நடுநடுவில் வருகின்றன
காரணம் அரக்கர்களே!
அரக்க குணமே அரக்க வடிவம்
அரக்க குணம் எவை?
துன்பமே தராதது அறம் என்பதை
நினைக்காதவர்கள் அரக்கர்கள்!
துன்பம் தீர வேண்டுமே
இலங்கை ஏற வேண்டுமே
என்ன வழி உள்ளது?
எங்கு உள்ளது?
“இராம” என்றால் எல்லாம் மாறும்
அதற்கு மாற்று
பிறிதில்லை என உறுதியானான் அனுமன்.
ஆம் -
இராம இராம எனில் எல்லாம் மாறும்
பாடல்-89:
வான் வழியில்
தேலோகம் கண்டான்
கற்பகமரம் கண்டான்
தேன் ஊறும் தெய்வத்தன்மை கொண்டிருந்தது
வான்வழியே மேலும் பறந்தான்
இலங்கை நகரின் மதிலில் தங்கினான்
பொற்கலசம் கண்டான்
அந்நகர் காண இயலவில்லை
ஒதுங்கி நின்று
அங்கிருந்து பசும்சுடர் வீசும்
சோலைகள் உடைய
பவளமலை மீது பாய்ந்தான்
பாடல்-90:
பவளமலை குலுங்கியது
அனுமன் பாய்ச்சலால் தள்ளாடியது
மலையின் நிலை இப்போது எப்படியிருக்கிறது -
மழையும் வாடைக்காற்றும் வீசும்போது
தடைபெற்ற மரக்கலக்கப்பல்
தன்னிடம் உள்ள பொருட்களை
தள்ளாடி சிந்துமே
அதுபோல் உள்ளது.
பாடல்-91:
அடேயப்பா!
பவள மலை -
பூமிக்கும் வானுக்கும் நடுவே
ஊன்றப்பட்டது போலும் உயரம்!
தேவலோகம் எனும் மங்கை
தன் அழகை
தானே பார்க்கும் கண்ணாடி போல்
இலங்கை தெரிகிறது
பாடல்-92:
நல் நகரமாம் இலங்கை நோக்கினான்
தாமரைக் கைகளை மடக்கி
தன் இடுப்பில் வைத்துக் கொண்டு
“இந்நகரை பிற நகருடன் ஒப்பிடல்
அழகுமல்ல - சரியுமல்ல!
அண்டங்களையும் ஆளக்கூடிய
இராவணன் வாழ்கிறான் இலங்கையில் என்பதே
பொன்னகரம் என்பதை விட
பெருமை வரக்காரணம்” என எண்ணினான்,.
பாடல்-93:
“தேவலோகத்தை வ்¢ட
இலங்கையே சிறந்த அழகு
விரும்பியதை விரும்பி உடன் பெறுகின்ற
சுகபோக இலங்கை இது!
சொர்க்கம் என்பது அருமறையில் மட்டுமல்ல
இலங்கையிலும் உள்ளது!”
என எண்ணினான் அனுமான்.
பாடல்-94:
“இலங்கையின்
உட்புற அளவு எழுநூறு யோசனை என்பார்கள்!
மூன்று உலகின் சிறந்த பொருட்களும்
இலங்கையில் கிடைக்கும்!
ஞானம் ஆராய்ந்தவருக்கும்
இலங்கையில் காணும்
காணத்தக்க காட்சிகள்
ஒரு அளவின் வசப்பட வாய்ப்பில்லையே!
இவ்வளவு வளமா!” என அதிசயம் கொண்டான் அனுமன்!
(கடல் தாவு படலம் நிறைவு பெற்றது)
பாடல்-95:
பொன்னைக் கொண்டு இழைத்தார்களோ!
அதில்-
மணியைப் பதித்தார்களோ!
இலங்கை நகர் மாடங்களை
மின்னலால் செய்தார்களோ!
எதைக் கொண்டு செய்தார்களோ!
நிலவைத் தொடுமளவு
அறிவினால் அறியமுடியா அளவு உள்ளதே
இலங்கையின் அழகு!
பாடல் - 96 :
தேவலோக மாடங்கள் சிறியன-
நாகலோக மாடங்களும் சிறியன-
இலங்கை மாநகர் மாடங்கள் முன்னால்!
வானத்தை
பயப்பட வைத்து
மகா மேரு மலையை
அசைத்துப் பார்த்த பெருங்காற்று
இலங்கையுள் நுழையும்போதுமட்டும்
தென்றலாகி விடுகிறதே!
பாடல் - 97 :
அந்த மாடங்களை
அழகு படுத்தியது எப்படி நடந்திருக்கும்?
பாகு போன்ற இன்சொல் பணிப்பெண்கள்
கார்மேக பின்னல்களை
துடைப்பமாக்கி
மாடங்களில் படிந்த
வாசனைப் பொருட்களை பெருக்கியிருப்பார்கள்
ஆகாய கங்கை நீரை
தமது அழகிய கைகளால்
அள்ளித் தெளித்திருப்பார்கள்
அதனால்தான் இத்தனை அழகு!
பாடல் - 98 :
இலங்கையில் அரக்கிகள் கூட அழகுதான்!
செம்பஞ்சுக் குழம்பு பூசிய பாதங்கள்
அதில் பாடல் எழுப்பும் சதங்கைகள்
அரக்கியரின் பாதங்கள்
செந்தாமரை மலருக்கு ஒப்புமை!
முன்பு அரக்கியர் மேனி
மேகக் கருநிறமுடன் இருந்தது
இப்போதோ-
பவள விரல்களின்
சிவப்பான ஒளியால்
அந்த மேகங்கள்
ஆபரணம் அணிந்த கூந்தலுக்கு
இணையாகி விட்டன!
பாடல் - 99 :
கஸ்தூரி வாசனை வீசுகின்ற
கற்பக மலர்களில் அமர்வதால்-
வண்டுகளுக்கும் வாசனை வந்தது
வண்டுகளின் வாயில்-
கற்பக மலர்களின் தேன் வடிகிறது
எனினும்
வண்டின் குணம் தாவுதல் என்பதால்
செங்கழுநீர் பூக்களில் அமர்கின்றன
இப்படிப்பட்ட
பூக்கள் கொண்ட ஆகாய கங்கை
நிலா முற்றத்தில் பாய்கிறது!
பாடல் - 100 :
மாளிகையும் அழகு
மாளிகையில் வாழும் மகளிரும் அழகு
அங்குள்ள மங்கையர்கள்
வளர்க்கும் கிளிகளுக்கு
மழலை கற்றுத் தந்தபோது
புல்லாங்குழல் தோற்றது வீணை தோற்றது
யாழ் தோற்றது ! அது மட்டுமா?
மாளிகையைச் சுற்றியிருந்த சுவர்கள்
அதில் பதிந்த பெரிய மணிகள்
அவற்றில் மங்கையரின் நிழல்கள்
பிரதிபிம்பம் ஏது? அசல் ஏது?
துணிந்து காண முடியாத நிலையில்
அந்த மாளிகையின் அழகு வாழ்கிறது!
--தொடரும்
மாண்டாள் அரக்கி -
வாயிலிருந்து வயிறு வரை கிழித்தான் அனுமன்
மேருமலை
தனக்கு கீழே இருக்கும்படி
உயரம் சென்று
நினைக்கும் வேகமும் தாண்டிய வேகமுடன்
சூரியப் பாதை வழியில் போனான்.
பாடல்-87:
“இத்தனை பெரியது கடல்” என்று
சொன்னதைக் காட்டிலும்
கடல் பெரிதாய் இருக்கிறது
அளவிட முடியாத வானப்பரப்பில் -
இது போல் துன்பம் எது நேர்ந்தாலும்
கவலையுறக் கூடாது என உணர்ந்தான் அனுமன்
இலங்கை அடைய வேண்டும் இடையூறு தீரும்”
என உணர்ந்தான் அனுமன்.
பாடல்-88:
துன்பங்கள் கடுமையானவை
நடுநடுவில் வருகின்றன
காரணம் அரக்கர்களே!
அரக்க குணமே அரக்க வடிவம்
அரக்க குணம் எவை?
துன்பமே தராதது அறம் என்பதை
நினைக்காதவர்கள் அரக்கர்கள்!
துன்பம் தீர வேண்டுமே
இலங்கை ஏற வேண்டுமே
என்ன வழி உள்ளது?
எங்கு உள்ளது?
“இராம” என்றால் எல்லாம் மாறும்
அதற்கு மாற்று
பிறிதில்லை என உறுதியானான் அனுமன்.
ஆம் -
இராம இராம எனில் எல்லாம் மாறும்
பாடல்-89:
வான் வழியில்
தேலோகம் கண்டான்
கற்பகமரம் கண்டான்
தேன் ஊறும் தெய்வத்தன்மை கொண்டிருந்தது
வான்வழியே மேலும் பறந்தான்
இலங்கை நகரின் மதிலில் தங்கினான்
பொற்கலசம் கண்டான்
அந்நகர் காண இயலவில்லை
ஒதுங்கி நின்று
அங்கிருந்து பசும்சுடர் வீசும்
சோலைகள் உடைய
பவளமலை மீது பாய்ந்தான்
பாடல்-90:
பவளமலை குலுங்கியது
அனுமன் பாய்ச்சலால் தள்ளாடியது
மலையின் நிலை இப்போது எப்படியிருக்கிறது -
மழையும் வாடைக்காற்றும் வீசும்போது
தடைபெற்ற மரக்கலக்கப்பல்
தன்னிடம் உள்ள பொருட்களை
தள்ளாடி சிந்துமே
அதுபோல் உள்ளது.
பாடல்-91:
அடேயப்பா!
பவள மலை -
பூமிக்கும் வானுக்கும் நடுவே
ஊன்றப்பட்டது போலும் உயரம்!
தேவலோகம் எனும் மங்கை
தன் அழகை
தானே பார்க்கும் கண்ணாடி போல்
இலங்கை தெரிகிறது
பாடல்-92:
நல் நகரமாம் இலங்கை நோக்கினான்
தாமரைக் கைகளை மடக்கி
தன் இடுப்பில் வைத்துக் கொண்டு
“இந்நகரை பிற நகருடன் ஒப்பிடல்
அழகுமல்ல - சரியுமல்ல!
அண்டங்களையும் ஆளக்கூடிய
இராவணன் வாழ்கிறான் இலங்கையில் என்பதே
பொன்னகரம் என்பதை விட
பெருமை வரக்காரணம்” என எண்ணினான்,.
பாடல்-93:
“தேவலோகத்தை வ்¢ட
இலங்கையே சிறந்த அழகு
விரும்பியதை விரும்பி உடன் பெறுகின்ற
சுகபோக இலங்கை இது!
சொர்க்கம் என்பது அருமறையில் மட்டுமல்ல
இலங்கையிலும் உள்ளது!”
என எண்ணினான் அனுமான்.
பாடல்-94:
“இலங்கையின்
உட்புற அளவு எழுநூறு யோசனை என்பார்கள்!
மூன்று உலகின் சிறந்த பொருட்களும்
இலங்கையில் கிடைக்கும்!
ஞானம் ஆராய்ந்தவருக்கும்
இலங்கையில் காணும்
காணத்தக்க காட்சிகள்
ஒரு அளவின் வசப்பட வாய்ப்பில்லையே!
இவ்வளவு வளமா!” என அதிசயம் கொண்டான் அனுமன்!
(கடல் தாவு படலம் நிறைவு பெற்றது)
ஊர் தேடு படலம்
பாடல்-95:
பொன்னைக் கொண்டு இழைத்தார்களோ!
அதில்-
மணியைப் பதித்தார்களோ!
இலங்கை நகர் மாடங்களை
மின்னலால் செய்தார்களோ!
எதைக் கொண்டு செய்தார்களோ!
நிலவைத் தொடுமளவு
அறிவினால் அறியமுடியா அளவு உள்ளதே
இலங்கையின் அழகு!
பாடல் - 96 :
தேவலோக மாடங்கள் சிறியன-
நாகலோக மாடங்களும் சிறியன-
இலங்கை மாநகர் மாடங்கள் முன்னால்!
வானத்தை
பயப்பட வைத்து
மகா மேரு மலையை
அசைத்துப் பார்த்த பெருங்காற்று
இலங்கையுள் நுழையும்போதுமட்டும்
தென்றலாகி விடுகிறதே!
பாடல் - 97 :
அந்த மாடங்களை
அழகு படுத்தியது எப்படி நடந்திருக்கும்?
பாகு போன்ற இன்சொல் பணிப்பெண்கள்
கார்மேக பின்னல்களை
துடைப்பமாக்கி
மாடங்களில் படிந்த
வாசனைப் பொருட்களை பெருக்கியிருப்பார்கள்
ஆகாய கங்கை நீரை
தமது அழகிய கைகளால்
அள்ளித் தெளித்திருப்பார்கள்
அதனால்தான் இத்தனை அழகு!
பாடல் - 98 :
இலங்கையில் அரக்கிகள் கூட அழகுதான்!
செம்பஞ்சுக் குழம்பு பூசிய பாதங்கள்
அதில் பாடல் எழுப்பும் சதங்கைகள்
அரக்கியரின் பாதங்கள்
செந்தாமரை மலருக்கு ஒப்புமை!
முன்பு அரக்கியர் மேனி
மேகக் கருநிறமுடன் இருந்தது
இப்போதோ-
பவள விரல்களின்
சிவப்பான ஒளியால்
அந்த மேகங்கள்
ஆபரணம் அணிந்த கூந்தலுக்கு
இணையாகி விட்டன!
பாடல் - 99 :
கஸ்தூரி வாசனை வீசுகின்ற
கற்பக மலர்களில் அமர்வதால்-
வண்டுகளுக்கும் வாசனை வந்தது
வண்டுகளின் வாயில்-
கற்பக மலர்களின் தேன் வடிகிறது
எனினும்
வண்டின் குணம் தாவுதல் என்பதால்
செங்கழுநீர் பூக்களில் அமர்கின்றன
இப்படிப்பட்ட
பூக்கள் கொண்ட ஆகாய கங்கை
நிலா முற்றத்தில் பாய்கிறது!
பாடல் - 100 :
மாளிகையும் அழகு
மாளிகையில் வாழும் மகளிரும் அழகு
அங்குள்ள மங்கையர்கள்
வளர்க்கும் கிளிகளுக்கு
மழலை கற்றுத் தந்தபோது
புல்லாங்குழல் தோற்றது வீணை தோற்றது
யாழ் தோற்றது ! அது மட்டுமா?
மாளிகையைச் சுற்றியிருந்த சுவர்கள்
அதில் பதிந்த பெரிய மணிகள்
அவற்றில் மங்கையரின் நிழல்கள்
பிரதிபிம்பம் ஏது? அசல் ஏது?
துணிந்து காண முடியாத நிலையில்
அந்த மாளிகையின் அழகு வாழ்கிறது!
--தொடரும்
No comments:
Post a Comment