Tuesday, 19 February 2013

சுற்றிலும் பெய்த மழை


             சிரமம் போயிருந்தேன். புதிதாக வெள்ளை நிற டெம்போ டிராவலர் நின்றது. ‘வரும் வரும்' என்று காத்திருந்த வண்டி அது. ஏன்?  இதற்கு முன்பு பழைய 407 வேன் மட்டுமே பயன் படுத்தி வந்தார் சுவாமிகள். ( இடுப்புக்கு கீழே சுவாமிகள் செயல்படா நிலை என்பதை கட்டுரை வாசிக்கும் அன்பர்கள் நினைவு கொள்க)அன்பர்கள்அதில் இரும்பு வெல்டு செய்யப்பட்டிருக்கும். சல்லடையில் மாவு குலுக்குவது போல கூட்டிக் கொண்டு போகும். இதனைப் பார்த்து சுவாமிகளின் அன்பர்கள் வாங்கித் தந்த வண்டி தான் புதிய டெம்போ டிராவலர். ரீ கண்டீஷன் செய்த வண்டி என்றாலும் சீராக பெயிண்ட் செய்து முறையாக உள்ளே வசதிகள் செய்யப்பட்ட  சவுகரியமான வண்டி. கோவை அன்பர்களும் மதுரை அன்பர்களும் செலவை ஏற்றுக் கொண்டனர்.
                  வண்டியைப் பார்த்துக் கொண்டிருந்த போது ‘போகம்பட்டி'யில் இந்த வண்டி வழங்கப்பட்டது என்றார். போகர் வாழ்ந்த ஊர் என்று சொன்னவர் சட்டென அவ்வூரில் தாய் தந்தையுடன் வாழ்ந்ததை நினைவு கொண்டார். “அப்பா முதலில் இறந்தார். கோமாவில் இருந்த அம்மாவுக்கு எப்படித்தான் தெரிந்ததோ அம்மாவும் இறந்தார்கள். பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் கோப்பெருந்தேவி இறந்தது போன்ற அதிர்ச்சி மரணம் என்றும் என் அம்மா மரணத்தை வர்ணிக்க முடியாது” என்று சொல்லித்ட்த் தொடர்ந்தார். “இரண்டு பேருக்கும் ஒரே குழி. சடங்கு செய்வதற்காக குளிப்பாட்டி முடித்ததும், குழியில் அந்த இரண்டு உடம்புகளையும் இறக்கும் போது அந்த இடத்தில் மட்டும் சுற்றிலும் மழை பெய்தது !” என்ற போது சுவாமியின் குரல் தாழ்ந்து விட்டது. ஆதி சங்கரரையும் பட்டினத்தாரையுமே விட்டுவிடாத  தாய்ப்பாசம் நமது சுவாமிகளையும் விடவில்லை என எண்ணிக்கொண்டேன்.

                                                                                       ( சந்திப்போம் 19.02.2013)

No comments:

Post a Comment