Friday, 11 January 2013

திருப்பாவையில் கண்கள்

மார்கழி :22
திருப்பாடல்:22

“பெண்கள் தாமரை விழியால் நோக்கினர்”என்ற பதத்திற்கு திருமுருக கிருபானந்த வாரியர் சுவாமிகள் “பெண்கள் தமது அரை விழியால் நோக்கினார்கள்”என்று விளக்கியதும் அந்தக்கூட்டம் முடியும் முன்பே ஒரு ஆளை அனுப்பி கவியரசு கண்ணதாசன் ஐந்துபவுன் சங்கிலி  பரிசளித்தார் என வாரியார் சுவாமிகள் கூறக் கேட்டிருக்கிறேன்.
இந்தத் திருப்பாவையில் “தாமரைப் பூப்போல செங்கண்” என்று வர்ணித்துவிட்டு அவை எம்மேல் “சிறுச்சிறிதே விழியா ஓ?” என்று கேட்கிறார்.கண்ணனது கண்கள் அருளுடன் மிகப்பெரிதாக தாமரைப்போல் சிவந்து உள்ளன. அவை சிறிதளவு எம்மேல் விழ வேண்டும் என்று கேட்டிருக்கலாம். அதிலும் சிறிது கிடைத்தால் போதும் என்று மிகப்பணிவுடன் வேண்டுகிறார் ஆண்டாள் நாச்சியார். “சிறுச்சிறிதே” என்பது மிகவும் நயமான பதம். ஆண்டாள் போல் தகுதியிருக்கும் நபருக்கு எது வழங்க வேண்டும் என்று கண்ணனுக்குத் தெரியாதா என்ன. அதனால் சிறுச்சிறிதே நோக்குவதே போதும் என்று கம்பீரமான தன்னடக்கமும் பக்தியும் காணும் பாடல் இது.

திருப்பாடல்:

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி சிறுச்சிறிதே எம்மேல் விழியாஓ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ எம்பாவாய்.

No comments:

Post a Comment