Sunday 13 January 2013

பொங்கல் வாழ்வு

அன்று முதல் இன்று வரை
பொங்கல் உண்டு
தனிச்சிறப்பு உண்டு
“தளர்ந்து போகாதே!பொங்கு”என்கிறது பொங்கல்
கொதிநிலை உணர்வுடன்
உன் இலட்சியத்தை ஒரே குறிக்கோளில்
சூடாக்கினால்
பொங்கி வழியும் வெற்றி என அறிவிக்கிறது பொங்கல்
வெல்லம் உண்டு அரிசி உண்டு
சூரியனைப்போற்றும் மனது உண்டு
நிச்சயம் நமக்கு நல்ல்லதே உண்டு
வாயில்லா மாட்டிற்கும் மதிப்பு உண்டு
ஜீவகாருண்யப் பொங்கல் இது
சந்தோஷப்பொங்கல் இது
மாற்றம் வரும் என்று நம்பும் பொங்கல் இது
நீரைச் சிக்கனம் செய்து
பூமிக்கு ஒத்துழைப்பு தரச்சொல்லி
இயற்கை கோரிக்கை வைக்கும்
பொறுப்பான பொங்கலும் இதுவே!

1 comment:

  1. உன் இலட்சியத்தை ஒரே குறிக்கோளில்
    சூடாக்கினால்//

    :)))இலக்கை சுட்டிய இனிய வாழ்த்துக்கு நன்றியும் தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் மகிழ்வும் வளமும் நிலைபெற பிரார்த்தனைகளும்!

    ReplyDelete