மார்கழி:12
எருமை என்றதும், “பெருத்த கருப்பு உருவம்! எமனின் குறியீடு! கணக்கு வாத்தியார் திட்டு!” முதலியன நினைவு வரலாம். அன்பு வழியாகவே காண ஆரம்பித்தால் காட்சிகள் மாறுகின்றன. ஆண்டாள் காணும் எருமைதான் எத்தனை அழகு வாய்ந்தது. அதோ பாருங்கள்! தாய்ப்பாசம் நிறைந்த எருமை தனது கன்றுக்கு பாலூட்ட நிற்கிறது. பால் உடனே சுரக்கவில்லை. மனம் இரங்கும்போதுதான் முலை வழியே பால் சுரக்க முடியும். இது ஒரு அபூர்வ கவனிப்பாகும். உடலில் சுரக்கும் திரவம் - அது எருமையானாலும் சரி அன்பு மன ரசாயனம் தேவைப்படுகிறது. அதன் பின்பு சுரக்கும் பாலினால் இல்லம் நனைந்து சேறாகிறதாம். வீட்டு வாசலில் பனி வழிந்து தலையில் சொட்டுகிறது. பனியும் ஈரம். பாலும் ஈரம். இரண்டுமே நீரின் அம்சங்கள். திருப்பாவையில் இந்த அழகியலைச் சுட்டிக்காட்டிய ஆண்டாள் நாம் நம்மை தூக்கத்திலிருந்து (அறியாமை) எழுப்பிக் கொள்ள “மனத்துக்கு இனியானைப்பாடுக” என்று நேரடியாக சொல்லாமல் , மனம் இரங்க வேண்டும் என ஈரம் வழியே நினைவூட்டுகிறார்.
திருப்பாடல்:
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ் நின்வாசற் கடைபற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ எம்பாவாய்.
எருமை என்றதும், “பெருத்த கருப்பு உருவம்! எமனின் குறியீடு! கணக்கு வாத்தியார் திட்டு!” முதலியன நினைவு வரலாம். அன்பு வழியாகவே காண ஆரம்பித்தால் காட்சிகள் மாறுகின்றன. ஆண்டாள் காணும் எருமைதான் எத்தனை அழகு வாய்ந்தது. அதோ பாருங்கள்! தாய்ப்பாசம் நிறைந்த எருமை தனது கன்றுக்கு பாலூட்ட நிற்கிறது. பால் உடனே சுரக்கவில்லை. மனம் இரங்கும்போதுதான் முலை வழியே பால் சுரக்க முடியும். இது ஒரு அபூர்வ கவனிப்பாகும். உடலில் சுரக்கும் திரவம் - அது எருமையானாலும் சரி அன்பு மன ரசாயனம் தேவைப்படுகிறது. அதன் பின்பு சுரக்கும் பாலினால் இல்லம் நனைந்து சேறாகிறதாம். வீட்டு வாசலில் பனி வழிந்து தலையில் சொட்டுகிறது. பனியும் ஈரம். பாலும் ஈரம். இரண்டுமே நீரின் அம்சங்கள். திருப்பாவையில் இந்த அழகியலைச் சுட்டிக்காட்டிய ஆண்டாள் நாம் நம்மை தூக்கத்திலிருந்து (அறியாமை) எழுப்பிக் கொள்ள “மனத்துக்கு இனியானைப்பாடுக” என்று நேரடியாக சொல்லாமல் , மனம் இரங்க வேண்டும் என ஈரம் வழியே நினைவூட்டுகிறார்.
திருப்பாடல்:
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ் நின்வாசற் கடைபற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ எம்பாவாய்.
No comments:
Post a Comment