Sunday, 6 January 2013

திருப்பாவையில் வலிமையான கேள்விகள்

மார்கழி :11


“தூங்குகிறேன் நன்றாக” என்கிறவரை “நீதான் நன்றாகத் தூங்கினேன் என்கிறாயே நீ உறங்கியது எப்படி உனக்குத் தெரியும்!” என்று ஒரு கேள்விக் கேளுங்கள்.சொன்னவர் திண்டாடிப் போவார். ஏன்?  அதற்கு பதில் சொல்ல அவரால் முடியாது. உண்மையான பதில் எதுவெனில் நமது ஆன்மா உறங்குவதில்லை., நமது புலன்கள் உறங்குவதை அது சாட்சியாகக் காண்கிறது என்பதே விடை. சுருக்கமாகச் சொன்னால், ஆன்மாவுக்கு இரவுமில்லை.பகலுமில்லை. உறக்கமும் இல்லை. விழிப்பும் இல்லை. என்பதே அர்த்தமாகும். நாம் நம்மை ஆன்மாவாகக் கருதாமல், விழிப்புணர்வாக உணர்ந்து கொள்ளாமல் வயிறு சம்மபந்தப்பட்டவர்சகவும் கண்ணாடி போட்டவராகவும் நெட்டை குட்டை என்றும், படித்தவர் பெயிலானவர் என்றும் கருதுவது சரியல்ல. அதனால்தான் இந்தத் திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் அழகாக “எற்றுக்கு உறங்குகிறாய்? இதன் பொருள் என்ன!:” என்று அர்த்தமற்ற - உயர்வு தராத - விழிப்புணர்வு கொள்ளாத தன்மையாகிய தூக்கத்தை கேள்வி கேட்டு ஆராய்கிறார். அந்தக் கேள்வியில் அக்கறையும் தெரிகிறது. பழி போடுவதாய் கேட்கவில்லை.

இதோ அந்த அருமையான பாடல்:

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழி மாரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
ஏற்றுக் குறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment