Tuesday 25 December 2012

திருப்பாவையில் உணவு



பாடல் - 2 :
மார்கழி இரண்டாம் நாள்

விரதம் வேறு. நோன்பு வேறு. கட்டுப்பாடு வேறு. பட்டினி வேறு. ஒவ்வொன்றும் ஒரு ஒரு சூழலைக் குறித்தது. உணவுக்கும் பழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை வேதங்கள் முழக்கி அறிவிக்கும். ஆண்டாள் கோதை நாச்சியார் , ஒரு தபாலுக்கு முகவரி எழுதுவது போல “வையத்து வாழ்வீர்காள்” என்று நம்மை நோக்கி எழுதியது இந்த இரண்டாம் பாடல். இதன் 4ஆம் வரியில் “நெய் உண்ணோம் பால்உண்ணோம்” என்கிறாள். நெய் உணவு கொழுப்பு தருவது. அதிகமான கொழுப்பு வகை உணவுகள் மந்தம் தருவன. உணவின் தன்மையில் பக்தியும் அடக்கம். இது  முக்கியமான உண்மை. “பாவை நோன்பு” என்பது பாவையாகிய பெண்ணுக்கு மட்டுமே என எண்ணக் கூடாது. பரமனைத் தவிர அனைத்து உயிர்களும் பெண்களே என்பது இங்கு கருதத்தக்கது.

பாடல்:2

வையகத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


1 comment:

  1. ஒரு தபாலுக்கு முகவரி எழுதுவது போல //

    ரசித்தேன்.

    ReplyDelete