Thursday, 13 December 2012

நினைத்துப்பார்க்கிறேன்

பண்டிட் ரவிசங்கர் இறந்தார் எனும் செய்திக்குள் ஒரு வலி. மகா கலைஞர். லெஜண்ட் என்கிறார்கள்.நாடும் உலகும் போற்றிட வாழ்ந்தார். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் தனது வாழ்நாள் இறுதி வரையில் நகைச்சுவை உணர்வுடன் வாழ்ந்தார் என்பது அற்புதமான செய்தி. ஏனெனில் ஒரு கலைஞனுக்கு ஒரு முகம் மட்டுமே இருப்பதில்லை என்பதை மறைக்கவே நாம் முயல்வோம். அவர் மகள் அனூஷ்கா டைம்ஸ் ஆப் இந்தியாவில் குறிக்கும்போது பாபி என்று நான் செல்லமாய் அழக்கும் என் அப்பா சீரியசாய் ஆஸ்பத்திரியி அட்மிட் ஆனபோது கூட தனது சிதார் மூலம்பூனை போல ஒரு ஒலி எழுப்பி சிரிக்கவைப்பார் என்கிறார். அது மட்டுமல்ல. குழந்தை போல அழுது  ( ஆடியன்ஸ் பார்க்காமல்) செய்து சந்தோஷப்படுவாராம். தன்னை ச்சுற்றிலும் சிரிப்பு பரவ - தனது புகழ்மலை - தன்னை அழுத்தாமல் காப்பாற்றிக்கொண்ட புத்திசாலி என்பது அந்த கட்டுரையில் நன்கு தெரிகிறது. "சிரித்து வாழ வேண்டும் .. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" என்ற வரிகள் எப்போதும் ஒளிரும் வரியாகவே இருக்கும். அண்ணல் காந்தி ஒரு முறை சொன்னார்:-" நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லை யென்றால் நான் எப்போதோ இறந்து போயிருப்பேன்"

1 comment:

  1. தனது புகழ்மாலை தன்னை அழுத்தாமல்...

    உன்னத மனப்பான்மை!

    ReplyDelete