Thursday, 30 July 2026

கவிஞர் பா. சத்தியமோகன் BIO DATA

 கவிஞர் பா. சத்தியமோகன்: பிறப்பு (15.5.1964)                         

பிறப்பும் வாழ்வும்

பெற்றோர்: தெய்வத்திரு.லலிதாம்பாள் & தந்தையார்: சு.பார்த்தசாரதி  

பிறப்பு:       விழுப்புரம் 23.6.1964

பூர்வீகம்: துறைமங்கலம் (பெரம்பலூர் அருகே)

சொந்த ஊர்: மணக்கால். இலால்குடி வட்டம்.. திருச்சி.

கல்வித்தகுதி: மின்னியல் & மின் அணுவியல் பட்டதாரி

                          அண்ணாமலை பல்கலைக் கழகம், சிதம்பரம்

                          M.B.A. (Human Resources), அழகப்பா பல்கலை.

 பெற்ற பட்டங்கள்:  “கவித்தென்றல்” பட்டம் 

 ஆன்மீகம்   : திருவாவடுதுறை 23 ஆம் குரு மகா சந்நிதானம் அளித்த

                              சைவ சித்தாந்த ரத்னா

சமூகத் தொண்டு:    (2009-2024) 15 ஆண்டுகள் இராமலிங்க வள்ளலார் 

                           சர்வதேச தரும பரிபாலன அறக்கட்டளை

                           சிறார் முதியோர் இல்லம், மேட்டுக்குப்பம். வடலூர்

குடும்ப வாழ்வு: மனைவி லாவண்யா M.A (தமிழ்)

மகன்: ச. அருண் சித்தார்த் B.E. (mech) 

மகள்: ச. அபிநயா B.H.M.S.

பேரன்கள்: 02 பேத்தி:- 01

முதல் கவிதை       : கணையாழி (1993)/ “நானும் நானும்”

அறிமுகம் செய்தவர்: சுஜாதா

வெளியான நூல்கள்: 121

                            இரண்டு ஆங்கில கவிதைத் தொகுப்புகள் உள்ளிட்ட 62 கவிதை நூல்கள், சிறுகதைகள்,கட்டுரை, ஆன்மீக நூல்கள், நாவல் உட்பட.

சாகித்ய அகாதமி தொகுப்பில்: “மண்ணில் தெரியுது வானம்” (2009)

மத்திய அரசுப்பணி: 03 ஆண்டுகள் தொலை பேசித் துறை மற்றும்

                            36 ஆண்டுகள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணி.   தலைமை மேலாளராக மின்னியல் துறை பணி ஓய்வு (2024).

இவருடைய கவிதைகள் பற்றி:   ஆஸ்திரிய கவிஞருடன் ஒப்பிடத்தக்கவை என்று கவிஞர். ஞானகூத்தன் கூறுகிறார். “இந்த நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்” நூலில் இவருடைய கவிதைகள் பல புறநானூற்று கவிதைகளோடு ஒத்து போவதாக எழுத்தாளர் சுஜாதா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க பணி: பெரிய புராணம், சுந்தரகாண்டம் ( புதுக்கவிதை வடிவில்)

விருதுகள்:

1.ஸ்டேட் பேங்க் இலக்கிய விருது

2.கவிஞர் வைரமுத்து வழங்கிய கவிஞர்கள் திருநாள் விருது 

3.வைகறை இலக்கிய வாசல் விருது.

4.ஜெயந்தன் இலக்கிய விருது .(தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களால் வழங்கப்பட்டது 2011)

5.சேக்கிழார் இலக்கிய விருது (சென்னை) 

6.கவிஞர் சிற்பி இலக்கிய பரிசு ( கோவை)  

7.எழுத்துக்களம் இலக்கிய விருது 

8.புதுவை குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழகம் வழங்கிய சேக்கிழார் விருது..  

9.நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறந்த எழுத்தாளர் விருது 

10.வேரித்தாஸ் ஆசியா தமிழ் ஒலிபரப்பு கவிதை விருது, 

பரிசுகள்:

1.புதுவை வானொலியில் தேர்வான “அம்மாவுக்கு ஒரு பரிசு” என்ற தனது கவிதையை (குஜராத்) ராஜ்கோட்டில் தேசிய கவிச் சம்மேளனத்தில் தமிழ் மொழியின் சார்பாக கலந்து கொண்டு வாசித்தார். அனைத்து இந்திய மொழிகளிலும் அக்கவிதை குடியரசு தினத்தன்று (26.1.2003) ஒலிபரப்பானது.

2.கலைமகள் அமரர் ராமரத்னம் நினைவு குறுநாவல் முதல் பரிசு- “சலனத்தீவுகள்”

3.இலக்கியபீடம் நாவல் போட்டி முதல் பரிசு-காக்கைச் சிறகினிலே.

4. கவிதை உறவுகள் இவருடைய “அம்மாவுக்கு ஒரு பரிசு” கவிதை நூலுக்கு பரிசு வழங்கியுள்ளது.

5. அமுதசுரபி சிறுகதைப் பரிசு “அப்பா வாசனை” சர்வதேசத் தன்மை வாய்ந்தது என சுஜாதா ஆனந்த விகடன் இதழில் “கற்றதும் பெற்றதும்” பகுதியில் எழுதியுள்ளார்.

மொழிப்பெயர்ப்பு:

1. SILENT RIVERS எனும் தொகுதிக்காக ஆங்கிலத்தில் வெளியானத2. மலையாள மனோரமா இதழிற்காக மலையாளத்திலும் இவர் கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.


        ****


No comments:

Post a Comment