நான் ஒளவை பேசுகிறேன் தொடர்: 17 / 16.12.25
**********************************************************
பாடல்: 17
***************
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணி
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.
ஏ மக்களே!
நீரோடையின் கரையில் சோர்வுற்றதுபோல நிற்கும் கொக்கு ஒன்றைக் கண்டேன். சிறு மீன்கள் எல்லாம் அதன் காலைச் சுற்றி வந்தபோதும் கொத்தித் தின்னாமல் இருந்தது. அவற்றி நீந்திப் போக விட்டுவிட்டது. அறிவில்லாத கொக்கு என நினைத்து விட்டேன்.
பெரிய மீன் வரும்போது கொத்திக்கொண்டு அந்தக் கொக்கு பறக்கும்போது எனக்கு ஒன்று புரிந்தது. அறிவுள்ளவர்கள் அடக்கத்துடன் இருப்பது மிகப் பெரிய வாய்ப்புக்காக;
அவர்கள் செயலின்றி இருக்கவில்லை. மிகப் பெரும் பலனுக்காக; தக்க காலத்தை நோக்குகிறார்கள் கொக்கு போல .
( ஈசனால் சிந்திப்போம்)
No comments:
Post a Comment