நான் ஒளவை பேசுகிறேன் ( 14) 12.12.25
*************************************************
பாடல் 14.
****************
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவை அல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டாதவன் நல் மரம்.
ஏ மனிதர்களே!
கிளைவிரித்து பல கொம்புகளுடன் உயர்ந்த மரங்கள் நல்ல மரங்கள் என்று நான் கூற மாட்டேன். அவற்றை விட்டுவிடுங்கள்.
அறிஞர்கள் சபையில் தரப்பட்ட ஏடுகளின் குறிப்புகளை உள் அர்த்தம் உணர்ந்து கொள்ள இயலாதவன் நல்ல மரம் என்பேன். அவனை மரம் என்று சொல்லுங்கள்.
No comments:
Post a Comment