நல் வழி
*****************
பாடல்:12
*******************
ஆற்றங் கரையின் மரமும் அர(சு) அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
மனிதர்களே
வாழ்வுக்காக இருத்தலுக்காக மனித சமூகம் எவ்வளவோ தொழில்களை மேற்கொண்டு வருகிறது. இந்தத் தொழில் உயர்வு என்று உயர்வு சொன்னவர்கள் சிறிது காலத்தில் அதுவே தாழ்வு என்பார்கள். ஐ.டி. தொழில் உயர்வு என்பதற்கு முன்பு கம்ப்யூட்டர் என் ஜினியரிங் தொழில் நுட்பம் போற்றப்பட்டது. அதற்கும்முன் சிவில் தொழில்நுட்பம் போற்றப்பட்டது. உண்மை எது? அதனை நான் சொல்லுகிறேன்.
ஆற்றங்கரையில் வாழ்ந்த பெரிய மரம் விழுந்து இறப்பதைக் கண்டீர்கள். அரசனே பாராட்டும் அளவுக்கு பெருமையோடு வாழ்ந்த வாழ்வு கொண்ட ஒருவனும் வீழ்வதை அறிவீர்கள். மற்ற மற்ற தொழில்களில் பணிகளில் பழுது வரும் . தாழ்வு வரும். அல்லது ஒரேயடியாக அழிவு வரும்.
அழியாத தொழில் ; ஏற்றம் மட்டுமே கொண்ட தொழில் உழுது வாழும் விவசாயம் ஒன்றுதான். அதற்கு ஒப்பான சமமான மற்ற தொழில் இல்லை.
உழுது சாப்பிட்டு வாழ்பவனே உரிமையோடு வாழ்பவன். மற்றவர்கள் உணவுக்காகப் பிறரைத் தொழுது சாப்பிடுகிறார்கள். அவர்கள் பின்பு செல்கிறார்கள்.
குறள்: 1033/ உழவு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் ; மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதனை வாழ்வில் தொழில் பற்றிய அறிவிப்பு மணியாக எண்ணி விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**
No comments:
Post a Comment