பூமியில் பிறக்கின்ற சிலர்
இன்னொருவர் தோளில் பூமாலையாக
மணந்து விட்டுப் போகின்றனர் தன் புகழ்பாடுவதில்லை
அவர்கள் தேவை என்ன
அவர்கள் ஆசை என்ன
தேர்ச்சக்கரத்து ஆணி போன்று
குடும்ப மையமாய் நின்று
காற்றில் சந்தனமாய்
வெடுக்கென கடிபட்ட மாவடுபோல்
ஐம்பத்தியெட்டில் மாரடைப்பில்
அடியேன் மாமியார் ஜெயலஷ்மி மறைந்தார்.
எப்போதோ வாசலில் நட்ட நந்தியாவட்டைச்செடி
இன்று அவர்கள் நினைவுநாளில்
முதல்பூ அவர்களுக்கு சிந்துகிறதோ தெரியவில்லை
காலத்தின் கணிதமும் காற்றின் கணிதமும்
மூச்சுக்காற்றின் கணிதமும் எவர் அறிவார்?
படகுப்பயணம் போன்றது இவ்வாழ்வு
எந்த அலையில் எவர் முடிவு
எவரால் கூற இயலும்.. உமக்கெமது வணக்கம்.
“யாருக்கும் கஷ்டம் தரக்கூடாது” என்று நீ கேட்டபடியே
வாய்த்தது மரணம் என்றாலும்
கண்ணீர் சிந்துகின்றோம் இன்று(26.8.2013) பதிமூன்றாம் ஆண்டு.
No comments:
Post a Comment