கல்விக்கு எல்லை இல்லை
****************************************
கற்றது கைம் மண்ணளவு; கல்லாதது உலகளவு என்று
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள்; மெத்த
வெறும் பந்தயம் கூற வேண்டாம்; புலவீர்
எறும்பும் தன் கையால் எண் சாண்.
மனிதர்களே.
சிறு எறும்பு ஒன்றைக் கண்டேன். அதன் கை ஜாணால் அது தன்னை அளந்துபார்த்தது. “தெரியுமா! நான் எட்டுஜாண் அளவு நீளம் உள்ளேன்! உள்ளேன்!” என்று சொல்வதைப் போன்றதுதான் புலவர்கள் தங்களைப் படித்தவர்களாக எண்ணிக்கொள்ளுதலாகும்.
இவ்வளவு ஏன்!
கலை மகள் சரஸ்வதி தேவியே கையில் உள்ள நூல் எதைக் குறிக்கிறது? எதற்காக அவள் கையில் நூல்? அவளே கல்விக்கு எல்லையும் கடவுளும் ஆவாள் எனும் போது எதற்காக கல்வி அன்னை படிக்க வேண்டும்? ஆம். கல்விக்கு எல்லை இல்லை. ஒவ்வொருவரும் கற்ற கல்வி உலகில் உள்ள கல்வியின் அளவில் ஒரு கைப்பிடி அளவுதான். கல்லாதது உலக அளவு.
கற்ற கல்விக்காக ஆணவம் கூடாது.
**
சிறந்த செயல்கள்
*****************************
மதியாதார் முற்றம் மதித்து ஒருகால் சென்று
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர்! உண்ணீர்! என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்.
கோடி கொடுத்தும் குடிபிறந்தார்தம்மோடு
கூடுதல் கோடி பெறும்.
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
மனிதர்களே.
செல்வம் வேண்டும் செல்வம் வேண்டும் என்று ஓடுகிறீர்கள். நல்லது.
நீங்கள் நாலு கோடிப்பணம் சம்பாதிக்க வழி சொல்கிறேன் கேளுங்கள். அல்லது ஏற்கெனவே உங்களிடம் நாலு கோடிப்பனம் இருப்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக இப்பாடலைப் படியுங்கள்.
எவர் ஒருவர் தம்மை மதித்துப் போற்றாதவர் வீட்டு முற்றம் ( வாசல்) மறந்துபோயும் கால்வைக்காமல் இருக்கிறார்களோ அவரிடம் ஒரு கோடி ரூபாய் உள்ளது என்று அர்த்தம்.
இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள் என்று உபசாரம் செய்யாதவர் வீட்டில் சாப்பிடாமை ஒரு கோடி ரூபாய்க்குச் சமம்.
பண்பட்டவர்கள், பண்பாடு உடையவர்கள் வீட்டில் ஒரு கோடி தந்தேனும் தமது உறவினர்களாகக் கொள்ளுதல் ஒரு கோடி.
கோடானு கோடி பணம் தருகிறேன் என்றாலும் பொய் சொல்லாதவனின் நாக்கு, பொய்மை இல்லாதவனின் வாக்கு ஒரு கோடிக்கு சமம் ஆகும்.
ஆம். இப்பாடல் புகழும் நாலு குணங்களுமே நாலு கோடி செல்வம் ஆகும்.
**
கவிஞர் பா. சத்தியமோகன்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே - திருமூலர்
Thursday, 15 January 2026
ஒளவையின் தனிப்பாடல் 2,3
மூவகை மக்கள்
*****************
சொல்லாமலே செய்வர் பெரியர்; சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் செய்யார் கயவரே! நல்ல
குலமாலை வேற்கண்ணாய்! கூறுவமை நாடில்
பலா மாவைப் பாதிரியைப் பார்!
மனிதர்களே.
இவ்வுலகம் மனிதர்களால் ஆனது. மனிதர்கள் உறவு வயப்பட்டவர்கள். உறவோ செயலை அடிப்படையாகக் கொண்டது.
அறிவினில் சிறந்த பெரியோர்கள் சொல்லாமலே செய்வார்கள். அவர்கள் பூவாமல் காய்க்கும் பலா மரத்தை ஒத்தவர்கள்.
அறிவினில் சிறியவர்கள், பிறர் சொல்வதைக் கேட்டு அதன் பிறகே செய்வார்கள். இவர்கள் மாமரம் போல், பூத்தபிறகே காய்ப்பவர்கள்.
பாதிரிமரமோ, பூக்குமே தவிர எந்தக் காயும் காய்க்காது.இவர்கள் கயவர்கள்.
மனிதர்களை வகை அறிந்து பழக வேண்டும் எனப்பகரும் ஒளவையின் தனிப்பாடல் இது.
***
வேளூர் பூதன் விருந்தை வியந்து பாடியது
******************************************************
வரகரிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேபுளித்த மோரும் திரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புரிந்த விருந்து இட்டான் ஈது
எல்லா உலகும் பெறும்.
மனிதர்களே.
சிலர் அளிக்கும் விருந்துக்கு ஈடு இணை இருப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு விருந்து வேளூர் பூதன் எனக்கு அளித்தான். அதன் சுவைக்கு எல்லா உலகங்களையும் அளிக்கலாம். அவ்வளவு சுவை. அந்த விருந்தில் என்னென்ன இருந்தது?
அது வரகு அரிசிச் சோறு.
வழுதுணங்காய் ( கத்தரிக்காய்) வாட்டு. ( கத்தரி பொரியல்)
முர முர என புளிப்பேறிய மோரும் ஆஹா!
விருப்பமுடன் விருந்து அளித்தான்.
எவ்வளவோ சாப்பிடுகிறோம். மறந்துவிடுகிறோம். அன்போடும் விருப்பத்தோடும் அளிக்கப்படும் சாப்பாடோ எல்லா உலகமும் தரலாம் எனும் அளவுக்குப் பாராட்டு பெற்றுள்ளது.
***
Monday, 12 January 2026
ஒளவையின் தனிப்பாடல்கள் - 1
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று எளிது
வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - ‘யாம் பெரிதும்
வல்லோமே' என்று வலிமை சொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்றும் எளிது.
மனிதர்களே
ஒரு மனிதன் என்னிடம் தம்பட்டம் அடித்துக்கொண்டான்.
“என்னால் எதுவும் செய்ய முடியும்”
அவனை அழைத்து சென்று கணாங்குருவி கூடு ஒன்றைக் காட்டினேன். வலிமையுடைய கரையான் புற்றைக் காட்டினேன்.. தேன் சிலம்பி எனப்படும் தேனீயின் கூட்டைக் காட்டினேன்..
அசந்து போனான். திகைத்தான். பிரமித்தான்.
இதெல்லாம் உன்னால் செய்ய முடியுமா என்று நான் கேட்பதற்கு முன்னமே “இதெல்லாம் என்னால் செய்ய முடியாதவை!” என்றான்.
அவர் அவர் திறமை , தகுதிக்கு ஏற்ற ஒரு செயலைச் செய்வது
எளிதாக இருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது.
சிக்கலாக செய்ய முடியாததாக ஒருவருக்குத் தோன்றும் ஒரு விஷயம் இன்னொருவருக்கு மிக எளிதாக இருக்குமே தவிர எல்லோரும் எல்லாமும் செய்துவிட இயலாது என்பதை ஒளவையின் தனிப்பாடல்கள் மூலம் உணர்வோம்.
**********
Friday, 9 January 2026
நல் வழி 29 - 40
பாடல்:29
************
மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்து அழைப்பார் யாரும் அங்கு இல்லை - சுரந்து அமுதம்
கற்றாதரல் போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத்தவர்.
மனிதர்களே.
இந்த உலகத்தில் நமக்கென சொந்தம் பாராட்ட ; அன்பு காட்ட யாரும் இல்லை என்று ஏதோ ஒரு கணம் நீங்கள் வருந்தியிருக்கலாம்.
அதோ பசு மாட்டைப் பாருங்கள். கன்று குட்டிக்கு அதனை “பால் கொடு” என்று யாரும் கட்டளை இடவில்லை. அதுவே சுரந்து அளிப்பது போல உங்களிடம் உள்ள செல்வத்தை பிறருக்கு அள்ளிக்கொடுக்கத் துவங்கினால்-
மரத்தின் பழங்கள் பழுத்துவிட்டால் எப்படி அந்த மரத்தினை நோக்கி வாருங்கள் என்று வெளவாலை யாரும் அழைக்காமலே வருவதுபோல -
உலகம் உங்களை நோக்கி வரும். இவர் எனக்கு உற்றார் இவர் எமக்கு உறவினர் என்று சொல்லவும் பேசவும் ஆரம்பிக்கும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக செல்வம் கொடுக்க கொடுக்க சுற்றத்தினர் பெருகுவர் என அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 30
****************
தாம்தாம் முன் செய்தவினை தாமே அனுபவிப்பர்
பூந்தாமரையோன் பொறி வழியே - வேந்தே !
ஒறுத்தாரை என்செயலாம்? ஊரெல்லாம் ஒன்றா (க)
வெறுத்தாலும் போமோ விதி.
அரசே!
செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் பொறி (விதி) வழியே, அவரவர்கள் தாம் செய்த முன்வினையின் பயனை தாமே அனுபவிக்கிறார்கள். ஒறுத்தாரை ( தீமை செய்தாரை) என்ன செய்ய முடியும்? ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி வெறுப்பு காட்டினாலும் விதி போவதில்லை. அனுபவித்தே ஆக வேண்டும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக முற்பிறப்பில் செய்தவினை மிகவும் வலிமை உடையது என அறிகிறோம். அதனைச் செய்தவர் அதனை அனுபவித்தே தீர வேண்டும் எனவும் புரிகிறது.
எல்லோரும் ஒன்று கூடி அந்த விதியை எதிர்த்தாலும் விதி மாறப்போவதில்லை என அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**
பாடல் :31
*******************
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று சால
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் ; பழிக்கு அஞ்சாத
தாரத்தின் நன்று தனி.
மனிதர்களே.
சில விஷயங்களில் ஒன்றைவிட ஒன்று மேல் என்று நினக்கிறோம்.
பிழையுடைய பாடலை ஒருவர் பாடக் கேட்பதை விட, சொற்கள் இல்லாத இசையே நல்லது. அதுவே போதுமானது. அர்த்தமுள்ள வரிகளே வாழ்க்கை, அதன் துணையே இசை.
உயர்ந்த குடும்பத்தில் பிறந்தோம் என்பார்கள். அதைவிடவும் ஒழுக்கம் எவ்வளவோ நல்லது. நல்ல பண்புகள் இல்லாமல் பழக்க வழக்கம் கோட்பாடுகள் இல்லாமல் உயர்ந்த குடும்பம் என்ற பெயரால் யாருக்கு என்ன பயன்?
எளியவரைத் துன்பம் செய்யும் வீரத்தைவிட, தீராத நோயுடன் இருப்பது நல்லது. எளியோரை வாட்டுவதை வீரம் என்று நினைப்பது மிகவும் தவறு. அந்த குணம் நோய்த்தன்மை உடையது.
பழிக்கு அஞ்சும் குணமே பெண்களின் கற்பு நிலை போற்றப்படுவதன் வேராகும். அதனால், ஆண்களும் உயர் நோக்கம் பெற்று வாழ்வார்கள். என்ன தவறும் செய்வேன், உடை, பேச்சு, உறவினர் போற்றுதல், சமையல் கற்றல், வீட்டு வேலைகள் என எந்தக் கட்டுப்பாடும் கொள்ளாமல் வாழ்வேன் என்ற நிலையில் பிறர் சுட்டிக்காட்டுவார்கள். அந்தப் பழிச் சொல்லுக்கும் அஞ்ச மாட்டேன் எனும் மனைவியோடு வாழ்வதைவிட, தனியாக வாழ்வது நல்லது.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் மூலமாக, எதை விட எதன் மதிப்பு சிறந்தது என்ற சிந்தனை சுட்டப்பட்டது.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 32
**************************
ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.
மாநிலத்து மனிதர்களே.
உங்கள் உயிரின் உள் தன்மை , உயர்ந்து சிறப்படைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் பதில் “ஆம்” எனில், உலகில் வாழும் நீங்கள் இல்லாதோருக்கு வறியவருக்கு சோறிடுங்கள். தண்ணீரும் குடிக்கக் கொடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் தருமமே நற்செயலே உங்கள் உயிருக்குத் துணையாகும்.
இவ்வாறு செய்வதற்கு தேவையான பண நிலை, செல்வநிலை இப்போது இல்லை. நல்ல நிலைக்கு வந்தபின் அன்னதானம் செய்கிறேன் என்கிறீர்களா? அது நடக்கப்போவதில்லை. ஏன்? ஆற்று வெள்ளத்தால் உண்டான மேடும் பள்ளமும் போல செல்வமானது வளர்வதும் கரைவதுமாகத்தான் இருக்கும் என்பதால் இன்றே சோறும் நீரும் தரும் துவக்கம் இன்றே கொள்க.
முயன்றால் முடியும். பணத்தால் முடியாத நிலையிலும் கருணையால் அதனைச் செய்ய இயலும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக, வறியவர்களுக்கு சோறும் நீரும் அளிக்கும் தருமச் செயல் ஒன்றே நமது உள் உயிர் விரிவு செய்யும் என அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 33
************************
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டு உருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டு இருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
மனிதர்களே
இந்த உலகில் இனிமையான சொற்களின் வலிமையை தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.
கடுமையாகப் பேசும் சொற்களால் மென்மையான சொற்களை வெல்ல முடியாது என்பதே உண்மை. ஆம். வெட்டனவை மெத்தனவற்றை வெல்லாது.
யானை மீது ( வேழம்) பட்டு ஊடுருவி யானையின் சதையைக் கிழித்து ரத்தம் பீறிட வைக்கிற அம்பினால் பஞ்சில் பாய்ந்து காயம் உண்டாக்குவதில்லை.
இரும்புப் பாரையால் ( கடப்பாரையால்) பாறையை பிளக்க முடியாது. பசுமையான வேர்களுக்கு பாறை பிளந்துவிடும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக மென்மையின் சக்தி புரியவைக்கப்பட்டு இனிய சொற்களின் சக்தி அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
********************************************************************************************
பாடல்:34
******************
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்று எடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல்.
மனிதர்களே.
கல்வி அறிவு உள்ளவனா இல்லையா என்று உலகினர் பார்ப்பதில்லை. அவனிடம் பணம், செல்வம் உண்டா என்று பார்க்கிறார்கள். அவனை எதிர்கொண்டு வரவேற்கவும் செய்கிறார்கள்.
பணம் இல்லாதவனை மனைவியே வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். ஈன்று எடுத்த என்று ஏன் சொல்கிறார்கள்? ஆடு மாடு போடும் கன்றுகளுக்குதானே “ஈனுதல்” என்ற சொல்லாட்சி வரும்? ஆம். இன்னார்தான் பிறப்பார் என்று தெரியாமையால் ஈனுதல் என்பதே பொருத்தம். அதனால்தான் வள்ளுவப் பெருந்தகையும் ஈன்றது குறிக்கும் குறள் ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கிறார்:-
“ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை”
பணம் இல்லாதவனை இல்லாள் முதலிலேயே சொல்லிவிடுகிறாள். அன்னை இரண்டாவது இடத்தில் மகனை வேண்டாம் என்று சொல்லக்காரணம், மகனுக்காக சம்பாதிக்க அவகாசம் அளித்துப் பார்த்துவிட்டு அதன்பிறகும் சம்பாதிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்வாள்.
பணம் இல்லாதவன் வாய்ச்சொல்லுக்கும் மதிப்பிருக்காது.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக பணத்தின் சக்தி அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**********************************************************************************************************
பாடல் :35
****************
பூவாதே காய்க்கும் மரமுமுள ; மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்து எனவே பேதைக்
குரைத்தாலும் தோன்றாது உணர்வு.
மனிதர்களே.
நீங்கள் உம்முடன் பழகுபவர்களில் இரு வகை மனிதர்களைக் காணலாம்.
குறிப்பறிந்து உங்களுக்குத் தேவையானதை செய்பவர்கள். இவர்கள் முதல் வகை. அவர்களிடம் நீங்கள் எதுவும் ஏவத் தேவை இருக்காது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? பூ, பிஞ்சு, காய், பழம் எனும் நிலைகளில் பூக்காமலே நேரடியாக காய்த்துவிடும் தாவர வகை போன்றவர்கள்.
இன்னொரு வகை மனிதர்கள். வாய் திறந்து குறைகளைச் சொன்னாலும் உணராத தன்மை கொண்டவர்கள். மீண்டும் மீண்டும் கூறினாலும் பயன் இருக்காது.எந்த உணர்வும் அவர்களுக்கு வருவதில்லை. மூடர்களாகிய இவர்களை எதனுடன் ஒப்பிடுவது? நன்றாகத் தூவி விதைத்தாலும் முளைக்காத தாவரங்கள் போன்றவர்கள் என்று கூறலாம்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக மனிதர்கள் வகை அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
*** *********************************************************************************************
பாடல்: 36
*********
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங்காலத்தில்
கொண்டகரு அழிக்கும் கொள்கை போல் - ஒண்டோடீஇ
போதம் தனம் கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.
ஒண்டோடீ இ !
(ஒளி மிக்க வளையல்களை அணிந்த பெண்ணே கேட்பாயாக)
நண்டு அழிவது எப்போது தெரியுமா? அதன் குஞ்சுகள் பிறப்பால்!
சிப்பி அழிவது எப்போது எனில், அதன் முத்துகள் பிறப்பால்!
வேய் ( மூங்கில்) அழிவது அதன் அரிசியால்!
கதலி ( வாழை) அழிவது எப்போது எனில், அது ஈனும் குலையால்!
இவை எல்லாம் எதற்காக சொல்கிறேன் ? அவை கொண்ட செயல்கள் அவற்றை விருத்தி செய்வதில்லை. அழிக்கின்றன.
அறிவிலும், உணர்விலும் , பணத்திலும், கல்வியிலும் சிறந்தவர்கள் அழியும் காலம் ஏற்படுமானால் ; அவர்கள் அழிவு எப்போது ஆரம்பம் எனில், பிற பெண்கள் மீது வைக்கும் தவறான ஆசையே அழிவின் ஆரம்பம்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக அழியும் வகை சுட்டப்பட்டது.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**************************************************************************************
பாடல்: 37
***********
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்துமில்லை - நினைப்பது எனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க்கு இல்லை விதி.
மனிதர்களே.
முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயனை, செயல்களின் பயனை வெல்வதற்கு வெற்றி கொள்வதற்கு வழி ஏடு எங்கும் இல்லை. வேத நூல்களிலும் சொல்லப்படவில்லை. என்ன நினைத்தும் கவலைப்பட வேண்டாம்.
கண் எதிரே வினைப்பயனை அனுபவிக்கும் நம் நெஞ்சை நாம் வருத்தப்பட விடக் கூடாது.
மோட்ச வீடாகிய முக்திப் பேறு அடைவதற்காக தவம் முயல்வாரை இந்த முற்பிறப்பு விதியால் ஒன்றும் செய்ய இயலாது.
“தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றல்லார்
அவம் செய்வார் ஆசையுட்பட்டு”
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக தவத்தின் உயர்வை அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***************************************************************************************************************************
பாடல்: 38
***********
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்ற நிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
மனிதர்களே
இருப்பது ஒரே பொருள்தான். அதுதான் எல்லாமும். ஆம். நாமோ எல்லாவற்றிலும் இரண்டாகப் பிரித்து பேதம் பார்க்கிறோம். இரண்டல்ல என்பதே அத்வைதம். அதை அறியாமல் நாம் எல்லாமும் இரண்டாகப் பிரிக்கிறோம்.
ஜீவாத்மா x பரமாத்மா ,
நல்லது x கெட்டது,
நான் x அவன்,
இல்லை x உண்டு என்று பேசிக்கொண்டுள்ளோம்.
உதாரணம் வேறு எதுவும் தேவையில்லை. கோரைப் புற்களை அறுத்தவர், அந்தப் புற்களைக் கட்டுவதற்கு அந்த புல்லையே பயன் படுத்த முடியும் என்பதை அறிவதில்லை. கயிறு தேடிக்கொண்டு அலைவார்கள். அதுபோல், இறைவனை வெளியில் தேடுவதும் அறிவற்ற செயலாகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக வாழ்வின் மேலாம் பரம் பொருளின் ஒருமை அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**************************************************************************************************
பாடல்:39
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒரு பொருளை
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்புங்
கலையளவே ஆகுமாம் ; காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.
***********************************
மனிதர்களே.
ஒருவன் தனது முப்பதாம் வயதிற்குள் விடவேண்டியன மூன்று.
அவை என்ன?
காமம் (விருப்பு); வெகுளி (வெறுப்பு), மயக்கம் (அறியாமை); இந்த மூன்றையும் விடுவதனால், பெற வேண்டிய ஒரு பொருள்,பரம்பொருள். அதுவே மெய்ப்பொருள். அந்த உணர்வைத் தப்பாமல் தன்னுள் பெற்றாக வேண்டும். அப்படிப் பெறாவிட்டால், அவன் படித்த கல்வி வாயளவில் சொல்லிக்கொள்ளலாமேதவிர அவன் கற்ற கல்வியினால் பயன் இல்லை .
அது மட்டுமல்ல, கணவனோடு கூடி முழு இன்பம் அனுபவிக்காத பெண் போல குறை உள்ளவனாகவே இருப்பான்.
இதனையே திருவள்ளுவரும் மெய் உணர்தல் அதிகாரத்தில்,
காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய் / குறள் : 360.
(நோய்: துன்பம்)
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் முப்பது வயதிற்குள் விட்டு விடவேண்டிய மூன்றையும்; பெற வேண்டிய ஒன்றையும் அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
*** *************************************************************************************************
பாடல்:40
தேவர் குறளும்; திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும்; முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்.
************
மனிதர்களே.
வள்ளுவத் தேவனாரின் திருக்குறளும்
சிறப்புடைய நான்கு வேதங்களின் இறுதிப்பொருளும்
அப்பர் திருஞானசம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவர் தேவாரத் தமிழும்
பதஞ்சலியார் அருளிய யோக சூத்திரமாகிய மொழியும்
மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையும் திருவாசகமும்
திருமூலர் திருமந்திரமும்
ஒரே கருத்துடையவை என்று உணர்க.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக உய்வைத் தரும் ஆறு நூல்களை அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
*** ******************************
பாடல்:29
************
மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்து அழைப்பார் யாரும் அங்கு இல்லை - சுரந்து அமுதம்
கற்றாதரல் போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத்தவர்.
மனிதர்களே.
இந்த உலகத்தில் நமக்கென சொந்தம் பாராட்ட ; அன்பு காட்ட யாரும் இல்லை என்று ஏதோ ஒரு கணம் நீங்கள் வருந்தியிருக்கலாம்.
அதோ பசு மாட்டைப் பாருங்கள். கன்று குட்டிக்கு அதனை “பால் கொடு” என்று யாரும் கட்டளை இடவில்லை. அதுவே சுரந்து அளிப்பது போல உங்களிடம் உள்ள செல்வத்தை பிறருக்கு அள்ளிக்கொடுக்கத் துவங்கினால்-
மரத்தின் பழங்கள் பழுத்துவிட்டால் எப்படி அந்த மரத்தினை நோக்கி வாருங்கள் என்று வெளவாலை யாரும் அழைக்காமலே வருவதுபோல -
உலகம் உங்களை நோக்கி வரும். இவர் எனக்கு உற்றார் இவர் எமக்கு உறவினர் என்று சொல்லவும் பேசவும் ஆரம்பிக்கும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக செல்வம் கொடுக்க கொடுக்க சுற்றத்தினர் பெருகுவர் என அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 30
****************
தாம்தாம் முன் செய்தவினை தாமே அனுபவிப்பர்
பூந்தாமரையோன் பொறி வழியே - வேந்தே !
ஒறுத்தாரை என்செயலாம்? ஊரெல்லாம் ஒன்றா (க)
வெறுத்தாலும் போமோ விதி.
அரசே!
செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் பொறி (விதி) வழியே, அவரவர்கள் தாம் செய்த முன்வினையின் பயனை தாமே அனுபவிக்கிறார்கள். ஒறுத்தாரை ( தீமை செய்தாரை) என்ன செய்ய முடியும்? ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி வெறுப்பு காட்டினாலும் விதி போவதில்லை. அனுபவித்தே ஆக வேண்டும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக முற்பிறப்பில் செய்தவினை மிகவும் வலிமை உடையது என அறிகிறோம். அதனைச் செய்தவர் அதனை அனுபவித்தே தீர வேண்டும் எனவும் புரிகிறது.
எல்லோரும் ஒன்று கூடி அந்த விதியை எதிர்த்தாலும் விதி மாறப்போவதில்லை என அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**
பாடல் :31
*******************
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று சால
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் ; பழிக்கு அஞ்சாத
தாரத்தின் நன்று தனி.
மனிதர்களே.
சில விஷயங்களில் ஒன்றைவிட ஒன்று மேல் என்று நினக்கிறோம்.
பிழையுடைய பாடலை ஒருவர் பாடக் கேட்பதை விட, சொற்கள் இல்லாத இசையே நல்லது. அதுவே போதுமானது. அர்த்தமுள்ள வரிகளே வாழ்க்கை, அதன் துணையே இசை.
உயர்ந்த குடும்பத்தில் பிறந்தோம் என்பார்கள். அதைவிடவும் ஒழுக்கம் எவ்வளவோ நல்லது. நல்ல பண்புகள் இல்லாமல் பழக்க வழக்கம் கோட்பாடுகள் இல்லாமல் உயர்ந்த குடும்பம் என்ற பெயரால் யாருக்கு என்ன பயன்?
எளியவரைத் துன்பம் செய்யும் வீரத்தைவிட, தீராத நோயுடன் இருப்பது நல்லது. எளியோரை வாட்டுவதை வீரம் என்று நினைப்பது மிகவும் தவறு. அந்த குணம் நோய்த்தன்மை உடையது.
பழிக்கு அஞ்சும் குணமே பெண்களின் கற்பு நிலை போற்றப்படுவதன் வேராகும். அதனால், ஆண்களும் உயர் நோக்கம் பெற்று வாழ்வார்கள். என்ன தவறும் செய்வேன், உடை, பேச்சு, உறவினர் போற்றுதல், சமையல் கற்றல், வீட்டு வேலைகள் என எந்தக் கட்டுப்பாடும் கொள்ளாமல் வாழ்வேன் என்ற நிலையில் பிறர் சுட்டிக்காட்டுவார்கள். அந்தப் பழிச் சொல்லுக்கும் அஞ்ச மாட்டேன் எனும் மனைவியோடு வாழ்வதைவிட, தனியாக வாழ்வது நல்லது.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் மூலமாக, எதை விட எதன் மதிப்பு சிறந்தது என்ற சிந்தனை சுட்டப்பட்டது.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 32
**************************
ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.
மாநிலத்து மனிதர்களே.
உங்கள் உயிரின் உள் தன்மை , உயர்ந்து சிறப்படைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் பதில் “ஆம்” எனில், உலகில் வாழும் நீங்கள் இல்லாதோருக்கு வறியவருக்கு சோறிடுங்கள். தண்ணீரும் குடிக்கக் கொடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் தருமமே நற்செயலே உங்கள் உயிருக்குத் துணையாகும்.
இவ்வாறு செய்வதற்கு தேவையான பண நிலை, செல்வநிலை இப்போது இல்லை. நல்ல நிலைக்கு வந்தபின் அன்னதானம் செய்கிறேன் என்கிறீர்களா? அது நடக்கப்போவதில்லை. ஏன்? ஆற்று வெள்ளத்தால் உண்டான மேடும் பள்ளமும் போல செல்வமானது வளர்வதும் கரைவதுமாகத்தான் இருக்கும் என்பதால் இன்றே சோறும் நீரும் தரும் துவக்கம் இன்றே கொள்க.
முயன்றால் முடியும். பணத்தால் முடியாத நிலையிலும் கருணையால் அதனைச் செய்ய இயலும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக, வறியவர்களுக்கு சோறும் நீரும் அளிக்கும் தருமச் செயல் ஒன்றே நமது உள் உயிர் விரிவு செய்யும் என அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 33
************************
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டு உருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டு இருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
மனிதர்களே
இந்த உலகில் இனிமையான சொற்களின் வலிமையை தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.
கடுமையாகப் பேசும் சொற்களால் மென்மையான சொற்களை வெல்ல முடியாது என்பதே உண்மை. ஆம். வெட்டனவை மெத்தனவற்றை வெல்லாது.
யானை மீது ( வேழம்) பட்டு ஊடுருவி யானையின் சதையைக் கிழித்து ரத்தம் பீறிட வைக்கிற அம்பினால் பஞ்சில் பாய்ந்து காயம் உண்டாக்குவதில்லை.
இரும்புப் பாரையால் ( கடப்பாரையால்) பாறையை பிளக்க முடியாது. பசுமையான வேர்களுக்கு பாறை பிளந்துவிடும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக மென்மையின் சக்தி புரியவைக்கப்பட்டு இனிய சொற்களின் சக்தி அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
********************************************************************************************
பாடல்:34
******************
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்று எடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல்.
மனிதர்களே.
கல்வி அறிவு உள்ளவனா இல்லையா என்று உலகினர் பார்ப்பதில்லை. அவனிடம் பணம், செல்வம் உண்டா என்று பார்க்கிறார்கள். அவனை எதிர்கொண்டு வரவேற்கவும் செய்கிறார்கள்.
பணம் இல்லாதவனை மனைவியே வேண்டாம் என்று சொல்லி விடுகிறாள். ஈன்று எடுத்த என்று ஏன் சொல்கிறார்கள்? ஆடு மாடு போடும் கன்றுகளுக்குதானே “ஈனுதல்” என்ற சொல்லாட்சி வரும்? ஆம். இன்னார்தான் பிறப்பார் என்று தெரியாமையால் ஈனுதல் என்பதே பொருத்தம். அதனால்தான் வள்ளுவப் பெருந்தகையும் ஈன்றது குறிக்கும் குறள் ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கிறார்:-
“ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை”
பணம் இல்லாதவனை இல்லாள் முதலிலேயே சொல்லிவிடுகிறாள். அன்னை இரண்டாவது இடத்தில் மகனை வேண்டாம் என்று சொல்லக்காரணம், மகனுக்காக சம்பாதிக்க அவகாசம் அளித்துப் பார்த்துவிட்டு அதன்பிறகும் சம்பாதிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்வாள்.
பணம் இல்லாதவன் வாய்ச்சொல்லுக்கும் மதிப்பிருக்காது.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக பணத்தின் சக்தி அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**********************************************************************************************************
பாடல் :35
****************
பூவாதே காய்க்கும் மரமுமுள ; மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்து எனவே பேதைக்
குரைத்தாலும் தோன்றாது உணர்வு.
மனிதர்களே.
நீங்கள் உம்முடன் பழகுபவர்களில் இரு வகை மனிதர்களைக் காணலாம்.
குறிப்பறிந்து உங்களுக்குத் தேவையானதை செய்பவர்கள். இவர்கள் முதல் வகை. அவர்களிடம் நீங்கள் எதுவும் ஏவத் தேவை இருக்காது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? பூ, பிஞ்சு, காய், பழம் எனும் நிலைகளில் பூக்காமலே நேரடியாக காய்த்துவிடும் தாவர வகை போன்றவர்கள்.
இன்னொரு வகை மனிதர்கள். வாய் திறந்து குறைகளைச் சொன்னாலும் உணராத தன்மை கொண்டவர்கள். மீண்டும் மீண்டும் கூறினாலும் பயன் இருக்காது.எந்த உணர்வும் அவர்களுக்கு வருவதில்லை. மூடர்களாகிய இவர்களை எதனுடன் ஒப்பிடுவது? நன்றாகத் தூவி விதைத்தாலும் முளைக்காத தாவரங்கள் போன்றவர்கள் என்று கூறலாம்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக மனிதர்கள் வகை அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
*** *********************************************************************************************
பாடல்: 36
*********
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங்காலத்தில்
கொண்டகரு அழிக்கும் கொள்கை போல் - ஒண்டோடீஇ
போதம் தனம் கல்வி போன்றவரும் காலம் அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.
ஒண்டோடீ இ !
(ஒளி மிக்க வளையல்களை அணிந்த பெண்ணே கேட்பாயாக)
நண்டு அழிவது எப்போது தெரியுமா? அதன் குஞ்சுகள் பிறப்பால்!
சிப்பி அழிவது எப்போது எனில், அதன் முத்துகள் பிறப்பால்!
வேய் ( மூங்கில்) அழிவது அதன் அரிசியால்!
கதலி ( வாழை) அழிவது எப்போது எனில், அது ஈனும் குலையால்!
இவை எல்லாம் எதற்காக சொல்கிறேன் ? அவை கொண்ட செயல்கள் அவற்றை விருத்தி செய்வதில்லை. அழிக்கின்றன.
அறிவிலும், உணர்விலும் , பணத்திலும், கல்வியிலும் சிறந்தவர்கள் அழியும் காலம் ஏற்படுமானால் ; அவர்கள் அழிவு எப்போது ஆரம்பம் எனில், பிற பெண்கள் மீது வைக்கும் தவறான ஆசையே அழிவின் ஆரம்பம்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக அழியும் வகை சுட்டப்பட்டது.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**************************************************************************************
பாடல்: 37
***********
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்துமில்லை - நினைப்பது எனக்
கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க்கு இல்லை விதி.
மனிதர்களே.
முற்பிறவிகளில் செய்த வினைகளின் பயனை, செயல்களின் பயனை வெல்வதற்கு வெற்றி கொள்வதற்கு வழி ஏடு எங்கும் இல்லை. வேத நூல்களிலும் சொல்லப்படவில்லை. என்ன நினைத்தும் கவலைப்பட வேண்டாம்.
கண் எதிரே வினைப்பயனை அனுபவிக்கும் நம் நெஞ்சை நாம் வருத்தப்பட விடக் கூடாது.
மோட்ச வீடாகிய முக்திப் பேறு அடைவதற்காக தவம் முயல்வாரை இந்த முற்பிறப்பு விதியால் ஒன்றும் செய்ய இயலாது.
“தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றல்லார்
அவம் செய்வார் ஆசையுட்பட்டு”
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக தவத்தின் உயர்வை அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***************************************************************************************************************************
பாடல்: 38
***********
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்ற நிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.
மனிதர்களே
இருப்பது ஒரே பொருள்தான். அதுதான் எல்லாமும். ஆம். நாமோ எல்லாவற்றிலும் இரண்டாகப் பிரித்து பேதம் பார்க்கிறோம். இரண்டல்ல என்பதே அத்வைதம். அதை அறியாமல் நாம் எல்லாமும் இரண்டாகப் பிரிக்கிறோம்.
ஜீவாத்மா x பரமாத்மா ,
நல்லது x கெட்டது,
நான் x அவன்,
இல்லை x உண்டு என்று பேசிக்கொண்டுள்ளோம்.
உதாரணம் வேறு எதுவும் தேவையில்லை. கோரைப் புற்களை அறுத்தவர், அந்தப் புற்களைக் கட்டுவதற்கு அந்த புல்லையே பயன் படுத்த முடியும் என்பதை அறிவதில்லை. கயிறு தேடிக்கொண்டு அலைவார்கள். அதுபோல், இறைவனை வெளியில் தேடுவதும் அறிவற்ற செயலாகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக வாழ்வின் மேலாம் பரம் பொருளின் ஒருமை அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**************************************************************************************************
பாடல்:39
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒரு பொருளை
தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்புங்
கலையளவே ஆகுமாம் ; காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.
***********************************
மனிதர்களே.
ஒருவன் தனது முப்பதாம் வயதிற்குள் விடவேண்டியன மூன்று.
அவை என்ன?
காமம் (விருப்பு); வெகுளி (வெறுப்பு), மயக்கம் (அறியாமை); இந்த மூன்றையும் விடுவதனால், பெற வேண்டிய ஒரு பொருள்,பரம்பொருள். அதுவே மெய்ப்பொருள். அந்த உணர்வைத் தப்பாமல் தன்னுள் பெற்றாக வேண்டும். அப்படிப் பெறாவிட்டால், அவன் படித்த கல்வி வாயளவில் சொல்லிக்கொள்ளலாமேதவிர அவன் கற்ற கல்வியினால் பயன் இல்லை .
அது மட்டுமல்ல, கணவனோடு கூடி முழு இன்பம் அனுபவிக்காத பெண் போல குறை உள்ளவனாகவே இருப்பான்.
இதனையே திருவள்ளுவரும் மெய் உணர்தல் அதிகாரத்தில்,
காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய் / குறள் : 360.
(நோய்: துன்பம்)
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் முப்பது வயதிற்குள் விட்டு விடவேண்டிய மூன்றையும்; பெற வேண்டிய ஒன்றையும் அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
*** *************************************************************************************************
பாடல்:40
தேவர் குறளும்; திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும்; முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்.
************
மனிதர்களே.
வள்ளுவத் தேவனாரின் திருக்குறளும்
சிறப்புடைய நான்கு வேதங்களின் இறுதிப்பொருளும்
அப்பர் திருஞானசம்பந்தர் சுந்தரர் ஆகிய மூவர் தேவாரத் தமிழும்
பதஞ்சலியார் அருளிய யோக சூத்திரமாகிய மொழியும்
மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையும் திருவாசகமும்
திருமூலர் திருமந்திரமும்
ஒரே கருத்துடையவை என்று உணர்க.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக உய்வைத் தரும் ஆறு நூல்களை அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
*** ******************************
Monday, 5 January 2026
நல் வழி 21 - 28
பாடல்: 21
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வரும் திருவும் வாழ்நாளும் வஞ்சம் இல்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்.
மனிதர்களே
வஞ்சம் இல்லாத மனத்தோடு செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லஷ்மிதேவியை நிதமும் வணக்கம் செய்க. துதி செய்க. அவள் வழங்கிக்கொண்டே இருப்பவை இவை:
அவையாவன:-
நீர்வளம் பெறுவீர்கள்
நல்ல வீட்டின் நிழல் பெறுவீர்கள்
நிலம் மூடும் அளவுக்கு நெல்கதிர் கட்டுகளால் நல் உணவு பெறுவீர்கள்
சமூகத்தில் நற்பெயர் கிட்டும்
பெருமை கிட்டும்
சிறந்த வாழ்வைப் பெறுவீர்கள் அது பெருவாழ்வாக இருக்கும்
நல்ல ஊரும் செல்வமும் பெற்று வளர்வீர்கள்.
நீண்ட ஆயுள் பெறுவீர்கள்
முலைபகர்வார் கொண்டாட்டம் ஆகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக செந்தாமரை மலரில் வாழும் லஷ்மிதேவி வழிபாட்டின் பயன்கள் அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 22
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
மனிதர்களே.
பலர் மிகவும் பாடுபட்டு உழைத்துப் பணம் சேர்க்கிறார்கள். அது தப்பில்லை. ஆனால் அதனைத் தனக்கு மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற சுயநல வெறி கொள்கிறார்கள். அதனால் மறைத்தல் ஆரம்பமாகிறது. சிலர் ஒளித்து வைக்கிறார்கள். சிலர் புதைத்துவைக்கிறார்கள். கோடி கோடியாய் வைத்துக்கொண்டு தம்மிடம் உள்ள செல்வம் மறைக்க, செல்வம் இல்லாதது போல பிச்சைத் தோற்றம் கூட காட்டுகிறார்கள்!
அவர்கள் யார்? அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு இவ்வாறு செல்வத்தை மறைத்து, ஒளித்து, புதைத்து, ஒன்றுமிலாதது போன்ற வேஷமிட்டு இவ்வாறெல்லாம் செய்கிறார்கள்? என்று சிந்தித்தால் விடை கிடைக்கும்.
ஒரே ஒரு நினைப்பு என்ன?
அந்த நினைப்பு இதுதான்.
உயிர் அவர்கள் உடல் கூட்டை விட்டுப் போய்விடும் என்பதை அடியோடு மறந்தவர்கள். நிரந்தரமாய் உயிர் இருக்கும் என நினைக்கும் பாவிகள்!
ஒருநாள் கூடு விட்டு ஆவி போனபின்பு அவர்கள் ஒளித்து வைத்த பணம் யாருக்கும் பயன்படப்போவதில்லை. அந்தப்பணத்தை அவர் மட்டுமல்ல , யாரும் அனுபவிக்கப் போவதில்லை.
நிலையாமை சுட்டிக்காட்டும் நல் வழிப்பாடல் இது.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக பாவிகள் செய்யும் செயல் என்பது பணத்தை மேலும் மேலும் சேர்த்து ஒளிப்பதாலும், புதைப்பதாலும் உயிர் போகும்போது அந்தப்பணம் பயன்படாது என்பதாகும்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 23
வேதாளம் சேருமே வெள்ளெருக்கம் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.
மனிதர்களே.
நீதி வழங்குதல் சரியான முறையில் நடை பெற வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பும் சரி, குடும்பத்தலைவன் கூறும் தீர்ப்பும் சரி, ஊர்த் தலைவர் கூறும் தீர்ப்பும் சரி. ஒருதலைப் பட்சமாக ஓரம் சார்ந்து அமையுமானால் என்ன நடக்கும்?
அவர் வீட்டில் பேய் சேரும். வேதாளம் சேரும்.
வெள்ளை எருக்கம் செடி பூப்பூக்கும்.
பாதாள மூலி எனும் புதர்க்கொடி படர்ந்து செழிக்கும்.
தரித்திரம் தரும் மூதேவியானவள் அந்த வீட்டுக்குள் புகுவாள். வாழ்க்கை நடத்துவாள்.
சேடன் ( பாம்பு) குடிபுகும்.
முலைபகர்வார் கொண்டாட்டம் ஆகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக நீதி சொல்பவர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்:24
நீறில்லா நெற்றிபாழ் ; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறு இல்
உடன் பிறப்பில்லா உடம்பு பாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.
மனிதர்களே.
உருப்படியான விஷயங்கள் நடுவே கவனிக்காமல் விட்டால் பாழாகும் விஷயங்களையும் கட்டுப்படுத்த முயற்சி செய்வதும் நம் கடமையாக இருக்கிறது.
திருநீறு அணியாத நெற்றி பாழ் வீட்டிற்கு சமம். குடியிருக்கும் வீட்டுக்குத்தானே வெள்ளை அடிப்பார்கள்? ஆம். ஈசன் நம் உடலாகிய வீட்டில் குடியிருக்கிறான்.
நெய் சேர்த்துக்கொள்ளாத உணவு பாழ். ஆம். உடம்புக்கு அவசியமானது நெய்.
எவ்வளவு உயர்ந்த ஊராக இருந்தாலும் ஆறு பாயாத ஊர் ஆறும் ஆற்றங்கரையும் அமையாத ஊருக்கு அழகு பாழ்.
கருத்து ஒற்றுமையுடன் கூடிய ; உடன்பிறப்பு அமையாவிட்டால் அந்த உடம்பு பாழ்.
நற்பண்புகள் அமைந்த மனைவி இல்லாத வீடும் பாழ் வீடே.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக பாழான விஷயங்கள் ஐந்தினை அறிந்தோம்.
விழிப்புணர்வு கொள்வோம். பாழாவதைத் தடுக்க முயல்வோம். சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்: 25
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு.
மனிதர்களே.
மனிதனது மானம் பெருமை இழக்க எது காரணம்?
சம்பாதித்த முதலில் மூலாதாரப்பணத்திலிருந்தே (அதாவது விதைப்பதற்கு வைத்திருக்கும் நெல்லில் இருந்தே ஒருவன் உணவுக்கு எடுத்து உண்பது போல) செலவு செய்துவிட்டால்; அதிகமாக செலவாகிவிட்டால் சிக்கனம் பின்பற்றாத வாழ்வு வாழ்ந்தவன் பெருமை அழிகிறது. மானம் அழிகிறது. அறிவு கெடுகிறது. ஆம். அறிவும் கெட்டுத்தான் போகிறது.
திக்குகளில் உள்ள ஊர்களில் வாழும் மக்கள் எல்லோருக்கும் அவன் திருடன் என்று தூற்றப்படுவான்.
ஏழு பிறப்புகளிலும் தீய குணம் கொண்டவனாக மாறுவான்.
நல்லவர்க்கும் பொல்லாதவன் ஆகிறான்.
ஆகவே மனமே! சிக்கனத்தை நாடு.
முலைபகர்வார் கொண்டாட்டம் ஆகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக சிக்கனத்தின் அருமை சுட்டியதை அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்:26
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல்காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.
மனிதர்களே.
உங்களுடைய குற்றங்களை நீக்கிகொள்ள நீண்ட காலம் ஆகும்.
ஆனால் உங்களிடம் ஒரே ஒரு விஷயம் நுழைந்தால் இருந்த இடமே தெரியாமல் பறந்து போகும் 10 விஷயங்கள் அறிவீர்களா?
இது வந்துவிட்டால், உங்கள் மதிப்பே உங்களுக்குப் பெரிதல்ல.
இது வந்துவிட்டால், உங்கள் குலம் ( குடும்பப் பெருமை) முக்கியமல்ல.
இது வந்துவிட்டால், உங்கள் கல்வி மறக்கிறது.
இது வந்துவிட்டால், கேட்டதைத் தரும் கொடை குணம் (வண்மை) போய்விடும்.
பகுத்து அறியும் அறிவு போகிறது.
தானே கொடுக்கும் தானப்பண்பு போகிறது.
கடவுள் வழிபாடு ( தவம்) போகிறது.
மேன்மை ( உயர்ச்சி) போகிறது.
முயற்சி ( தாளாண்மை) போகிறது.
தேனின் கசிவு போல் சொல் உடைய பெண்கள் மீது தோன்றும் ஆசை போகிறது.
அது என்ன?
பசி!
பசியின் சக்தி இது!
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக பசி வந்திடப் பறக்கும் பத்து விஷயங்கள் அறிந்தோம். பிறர் பசி போக்கவும் இயன்ற வழி செய்வோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
***
பாடல்:27
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.
மனிதர்களே.
நீங்கள் அடைவது அனைத்தும் உங்கள் எண்ணங்களால் அடையப்பெற்றவை என்று நூறு சதவீதம் உங்களால் சொல்ல முடியாது.
ஏன் எனில், நீங்கள் நினைக்கும் பொழுதே அந்த நினைப்பு ஒழிந்து அதன் பொருள் வேறு ஒன்றாக மாறும்.
அல்லது
நீங்கள் நினைத்த ஒன்றே அதே பொருளில் வந்து சேர்ந்தாலும் சேரக்கூடும்.
நீங்கள் நினைத்த ஒன்று , நினைக்கும் முன்பே தானே வந்து சேர்ந்தாலும் சேரும்.
எல்லாமும் என்னை ( உங்களை) ஆளும் ஈசன் செயல் என்று உணருங்கள்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் மூலமாக நினைப்பதும் அடைவதும் நினைக்கும் முன்பே நடப்பதும் நம் செயல்பாடுகளால் அல்ல, ஈசன் செயல் என அறிகிறோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**
பாடல்:28
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்தனையும் சஞ்சலமே தான்.
மனிதர்களே.
சுடப்படாத களிமண்ணில் செய்யப்பட்ட கலம், குழைந்து குழைந்து வினாடிக்கு வினாடிக்கு வளைசல் ஏற்படும். அந்த மண்கலமும் மனிதனின் மனமும் ஒன்றே.
சாகும் வரை சஞ்சலத்தில்தான் உழலுகிறது மனித மனம். அது அப்படி ஆகுமோ. இது இப்படி ஆகுமோ என்ற துடிப்பு இல்லாத வினாடிகளோ நிமிஷமோ நாளோ வாரமோ வருஷமோ உண்டா?
இத்தனை கவலை படும் மனிதனின் அன்றாடத் தேவைகள் என்ன?
ஒரு நாள் முழுதும் பசியாற ஒரு நாழி ( ஒரு படி) அரிசி போதும்.
உடுப்பதற்கு நான்கு முழம் துணியே போதும்.
ஆனால் சாகும் வரைக்கும் மனிதன் நினைந்து எண்ணுவதோ 80 கோடி எண்ணங்கள் கொண்ட கண்மூடித்தனமான மனித வாழ்க்கை. அத்த்னையும் மண்ணில் செய்த கலம் போன்றது.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக நிலையில்லாத மனிதர்கள் கொண்ட வீண் கவலைகள் 80 கோடிக்கும் அதிகம் என அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
**
Sunday, 4 January 2026
நல் வழி - 20
பாடல்:20
********
அம்மி துணையாக ஆறுஇழிந்த ஆறுஒக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.
**********
மனிதர்களே
ஒருவன் அம்மைக்கல்லைக் கொண்டு படகு செய்கிறேன் என்று சொன்னான். எதற்கு என்றேன். ஆற்றைக் கடக்க இந்த அம்மிக்கல்லில் ஏறி அமர்ந்து கொள்வேன், அது என்னை மறுகரை சேர்க்கும் என்றான்.
அம்மிக்கல்லை நம்பி ஆற்றினை கடக்க நினைக்கும் அடிமுட்டாள்தனமும் ; கொம்மை முலை கொண்ட விலை மாதர்கள் பகிரும் இன்பத்தோடு கூடிய கொண்டாட்டமே வாழ்வாக இருக்கும் என்று நினைப்பதும் ஒன்றே. ( கொம்மை முலை : திரண்ட முலை) .
அவர்களோடு வாழ்வதும் பொழுதுபோக்குவதும் இந்தப் பிறவியில் உங்கள் பணம் எவ்வளவு இருப்பினும் அத்தனைப் பெரும் செல்வத்தையும் அழிக்கும்.
மறுபிறவியில் வறுமை தொடர்வதற்கும் விதைபோல தொடரும் செயலே கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் ஆகும்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக செல்வம் அழிப்பது விலைமாதர் தொடர்பு என அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.
நல் வழி - 19
பாடல்:19
********************
சேவித்தும் சென்று இரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.
******************
மனிதர்களே
நாம் நம் உடம்பில் எந்த உறுப்புக்காக அதிகம் நம் வாழ்நாள் கழிக்கிறோம்?என்று யோசித்திருக்கிறீர்களா?
வணங்குகிறோம். சேவிக்கிறோம், எதற்காக? அதன் இறுதி பயன் என்ன?
தெளிந்த நீரைக் கொண்ட கடலையும் தாண்டிக் கடக்கின்றோம்?அதன் இறுதிகட்ட பயன் என்ன?
பிறரைப் பெரியவராக பாவிப்பது எதற்காக? அதன் இறுதிகட்ட பயன் என்ன?
உலகத்தையே ஆளத் துடிக்கிறோம். அதன் இறுதிகட்ட பயன் என்ன?
பாடல்களை இசைக்கிறோம். அதன் இறுதிகட்ட பயன் என்ன?
நாம் நம் உடம்பில் எந்த உறுப்புக்காக அதிகம் நம் வாழ்நாள் கழிக்கிறோம்?என்று யோசித்தால் வயிற்றுப்பாட்டுக்காகத்தான் என்பது புரியும். பசி. பசி. வயிற்றுப் பசியின் கொடுமையால் நாழி அரிசி வேண்டியே ( படி அரிசி) உலகில் இவ்வளவு காரியமும் செய்கிறோம்.
ஒளவை அருளிய நல் வழியின் பாடல் இதன் மூலமாக பசி பற்றிய ஆழமான சிரமம் நம்மை பிறப்பிலிருந்தே இயக்கி வருகிறது என அறிந்தோம்.
விழிப்புணர்வு பெற சிந்திப்போம். உயர்வோம்.